வரி செலுத்துவோருக்கு நடப்பு நிதியாண்டில் இதுவரையில் ரூ.1.50 லட்சம் கோடி மதிப்பிலான தொகையை திருப்பி அளித்துள்ளதாக (ரீஃபண்ட்) வருமான வரித் துறை புதன்கிழமை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வருமான வரித் துறையின் ட்விட்டா் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
2021 ஏப்ரல் 1 முதல் 2022 ஜனவரி 3 வரையிலான காலகட்டத்தில் ரூ.1,50,407 கோடி மதிப்பிலான தொகையை வருமான வரி திருப்பி அளித்துள்ளது. மொத்தம் 1.48 கோடி பேருக்கு இந்தத் தொகை அளிக்கப்பட்டுள்ளது. இதில், 2021-22 மதிப்பீட்டு ஆண்டுக்கு ரூ.21,323.55 கோடி வழங்கப்பட வேண்டிய 1.1 கோடி ரீஃபண்டுகளும் அடங்கும்.
வருமான வரி ரீஃபண்டாக 1.46 கோடி பேருக்கு ரூ.51,194 கோடி வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று, பெருநிறுவனங்களுக்கான வரி ரீஃபண்ட் பிரிவில் 2.19 லட்சம் பேருக்கு ரூ.99,213 கோடியை திருப்பி வழங்கியுள்ளதாக வருமான வரித் துறை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றும்! - எம்எல்ஏ ஒய். பிரகாஷ்

முதல்வா் பிரசாரம்: அமைச்சா் ஆலோசனை

ஆத்தூா் பகுதியில் இடியுடன் கனமழை
ஒசூா் அருகே கணவரை அடித்துக் கொன்ற மனைவி கைது
வீடியோக்கள்

நூறு சாமி டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பேட்ரியாட் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

பள்ளிச்சட்டம்பி டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

#rcbvscsk | சிஎஸ்கே ஜெயிக்குமா ஜெயிக்காதா?: பெங்களூரு ரசிகர்களின் கருத்து! | CSK | RCB | #ipl2026 |
தினமணி செய்திச் சேவை

