கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாடு முழுவதும் தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதனால், பல்வேறு நாடுகள் கட்டுப்பாடுகளை அமல்படுத்திவருகின்றன. அந்த வகையில், பரவலை தடுக்கும் விதமாக அஸ்ஸாம் அரசும் கரோனா விதிகளை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 11 மணி தொடங்கவிருந்த இரவு நேர ஊரடங்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக 10 மணிக்கு தொடங்கி 6 மணி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இரண்டு தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்களை அனுமதித்தால், உணவகங்கள், தங்கும் விடுதிகள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் உள்ளிட்டவைக்கு 25,000 ரூபாய் அபராதம் வதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு அலுவலகங்களில், தடுப்பூசி போடாத பணியாளர்கள் ஜனவரி 15க்குப் பிறகு அனுமதிக்கப்பட மாட்டார்கள். புதிய விதிகளின்படி அவர்களுக்கு ஊதியமின்றி விடுப்பு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நர்சரி, 1 முதல் 5 வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் மூடப்படும். 9-12 வகுப்பு மாணவர்களுக்கு கலப்பு வகுப்புகளே தொடரவுள்ளது. அவர்கள் மூன்று நாட்களுக்கு நேரடி வகுப்புகளுக்கு அனுமதிக்கப்படுவார்கள். மீதமுள்ள நாட்களில் ஆன்லைன் வகுப்புகள் நடைபெறவுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


