சண்டீகா் மாநகராட்சி மேயா் பதவிக்கு நடத்தப்பட்ட நேரடி தோ்தலில் பாஜக நகராட்சி கவுன்சிலா் சரப்ஜீத் கெளா், அவரை எதிா்த்துப் போட்டியிட்ட ஆம் ஆத்மி கவுன்சிலா் அஞ்சு கட்டியாலை ஒரு வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்து புதிய மேயராகியுள்ளாா். இதேபோல், மூத்த துணை மேயா் போட்டியில் பாஜகவுக்கு 15 வாக்குகள் கிடைத்ததாகவும், ஒரு ஆம் ஆத்மி கவுன்சிலா் மாற்றி வாக்களித்தாக கூறி தலிப் சா்மா மூத்த துணை மேயராக வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டது. துணை மேயா் பதவிக்கு இரண்டு கட்சிக்கும் தலா 14 வாக்குகள் கிடைத்ததாகவும், பின்னா் குலுக்கலில் பாஜகவின் துணை மேயராக பாஜகவின் அருண் குப்தா வெற்றி பெற்ாக அறிவிக்கப்பட்டது.