மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

புணேவில் மகன், மகள் கழுத்து நெரித்துக் கொலை: தாய் கைது

மகாராஷ்டிர மாநிலம், புணே மாவட்டத்தில் தனது இரண்டு குழந்தைகளையும் தாயைக் கழுத்து நெரித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

News image
Updated On :8 ஜனவரி 2022, 10:29 am

மகாராஷ்டிர மாநிலம், புணே மாவட்டத்தில் தனது இரண்டு குழந்தைகளையும் தாயைக் கழுத்து நெரித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதுதொடர்பாக காவல்துறையினர் கூறுகையில், 

புணேவின் புறநகரில் உள்ள முல்ஷியில் உள்ள தொழிலாளர் முகாமுக்கு அருகே 24 வயது பெண் தனது இரண்டு வயது மகனையும், மூன்றரை வயது மகளையும் கழுத்து நெரித்துக் கொன்றுள்ளார்.

கட்டுமான தளத்தில் கூலித்தொழிலாளியாக இருக்கும் பெண்ணின் கணவர் வழக்கம்போல் மதிய உணவுக்கு வீட்டிற்கு வந்தபோது மனைவி மற்றும் குழந்தைகளைக் காணாததால், இந்த கொலை சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

அந்த பெண் லோனாவாலாவில் உள்ள தனது தம்பி வீட்டில் பதுங்கி இருந்ததாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின்பேரில் பெண்ணை கைது செய்தனர். 
மேலும், குழந்தைகளின் உடல்கள் தொழிலாளர் முகாமுக்கு அருகிலுள்ள புதரில் கண்டெடுக்கப்பட்டன. 

குற்றம் சாட்டப்பட்டவர் ஐபிசியின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் காவல்துறையினர் அப்பெண்ணிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.