குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

புணேவில் மகன், மகள் கழுத்து நெரித்துக் கொலை: தாய் கைது

மகாராஷ்டிர மாநிலம், புணே மாவட்டத்தில் தனது இரண்டு குழந்தைகளையும் தாயைக் கழுத்து நெரித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

News image
Updated On :8 ஜனவரி 2022, 10:29 am

DIN

மகாராஷ்டிர மாநிலம், புணே மாவட்டத்தில் தனது இரண்டு குழந்தைகளையும் தாயைக் கழுத்து நெரித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதுதொடர்பாக காவல்துறையினர் கூறுகையில், 

புணேவின் புறநகரில் உள்ள முல்ஷியில் உள்ள தொழிலாளர் முகாமுக்கு அருகே 24 வயது பெண் தனது இரண்டு வயது மகனையும், மூன்றரை வயது மகளையும் கழுத்து நெரித்துக் கொன்றுள்ளார்.

கட்டுமான தளத்தில் கூலித்தொழிலாளியாக இருக்கும் பெண்ணின் கணவர் வழக்கம்போல் மதிய உணவுக்கு வீட்டிற்கு வந்தபோது மனைவி மற்றும் குழந்தைகளைக் காணாததால், இந்த கொலை சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 

அந்த பெண் லோனாவாலாவில் உள்ள தனது தம்பி வீட்டில் பதுங்கி இருந்ததாக காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின்பேரில் பெண்ணை கைது செய்தனர். 
மேலும், குழந்தைகளின் உடல்கள் தொழிலாளர் முகாமுக்கு அருகிலுள்ள புதரில் கண்டெடுக்கப்பட்டன. 

குற்றம் சாட்டப்பட்டவர் ஐபிசியின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் காவல்துறையினர் அப்பெண்ணிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.