வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?11 மணி வாக்குப்பதிவு நிலவம்: புதுவை- 37.70%, கேரளம்- 32.60%, அஸ்ஸாம் - 37.98% வாக்குப்பதிவுதிருக்கனூர் வாக்குச்சாவடியில் வாக்கு சேகரித்த பாஜக: காங்கிரஸ் வாக்குவாதம் - காவல் துறை தடியடிகேரளமே வெளியே வாருங்கள்! சிறந்த எதிர்காலத்துக்கு வாக்களியுங்கள்! ராகுல் காந்தி கேரளத்தில் 100 தொகுதிகளுக்கு மேல் வெல்வோம்! காங்கிரஸ் கூட்டணிபுதுவையின் எதிர்காலத்திற்கு ஒவ்வொரு வாக்கும் முக்கியம்: பிரதமர் மோடி
/

அச்சத்தில் தில்லி காவல்துறை: 1,700 காவலர்களுக்கு கரோனா

தேசியத் தலைநகா் தில்லியில் 1700 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, காவலர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :12 ஜனவரி 2022, 7:02 am

புது தில்லி: தேசியத் தலைநகா் தில்லியில் 1700 காவலர்களுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதையடுத்து, காவலர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வாரம் முதல் இரவு ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது. இதைத்தொடர்ந்து, கரோனா தொடா்பான வழிகாட்டுதல்கள் மீறுவதைக் கண்காணிக்கக் காவல் துறை மற்றும் நிா்வாக அதிகாரிகள் விழிப்புடன் செயல்பட்டு வரும் நிலையில், காவலர்களிடேயை தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. 

முன்னதாக, சுமார் 1,000 தில்லி காவலர்களுக்கு கரோனா பாதிப்பு  இருந்த நிலையில், தற்போது இந்த பாதிப்பு 1,700 ஆக அதிகரித்துள்ளது. 

தில்லி காவல்துறை தலைமையகத்தில் கரோனா நேர்மறையானவர்கள் அனைவரும் வீட்டில் தனிமையில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர். 

கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 21,259 பேருக்குத் தொற்று இருப்பதாக உறுதியாகியுள்ளது. பாதிப்பு விகிதம் 25,65 சதவீதமாகப் பதிவாகியுள்ளது. மேலும், ஒரேநாளில் 23 இறப்புகள் பதிவாகியுள்ள நிலையில் மொத்த இறப்புகளின் எண்ணிக்கை 25,200 ஆக உள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.