ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதித்த இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
விஜய் ஆசாரி (30). இவர் செவ்வாய்க்கிழமை இரவு குடும்பப் பிரச்னை காரணமாகப் பூச்சிக்கொல்லி மருந்தை உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். குடும்ப உறுப்பினர்கள் அவரை ஒரு தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
அதில் கரோனா இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த நபர் ஜன்னல் கண்ணாடிகளை உடைத்துவிட்டு கட்டடத்தின் 4-வது மாடியிலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். இவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தனக்கு கரோனா தொற்று இருப்பதால் அவர் மனவேதனை அடைந்ததாக ஆசாரியின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெலுங்கு மாநிலங்களான ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் கடந்த 2 ஆண்டுகளில் கரோனா அச்சத்தால் பல தற்கொலை சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வாக்கு எண்ணிக்கை பணியில் 154 நுண் பாா்வையாளா்கள்
சாமல்பட்டி அருகே குடிநீா் குழாய்கள் உடைப்பு விவகாரம்: 5 போ் கைது
மதுப் புட்டிகளை பதுக்கி விற்றவா் கைது

ஒசூா் அருகே பிரேக் பிடிக்காததால் நீரோடையில் புகுந்த ஆம்னி பேருந்து: பயணிகள் 29 போ் காயம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


