கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

உ.பி.யில் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக வெல்லும்: துணை முதல்வர்

உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக வெற்றி பெறும் என அந்த மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா இன்று (வியாழக்கிழமை) தெரிவித்தார்.

News image
கோப்புப்படம்
Updated On :20 ஜனவரி 2022, 4:34 pm

DIN


உத்தரப் பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக வெற்றி பெறும் என அந்த மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா இன்று (வியாழக்கிழமை) தெரிவித்தார்.

இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது:

"ஊழல் செய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதை காங்கிரஸ் எதிர்க்கும். இதன்மூலம், அவர்கள் ஊழலுக்கு ஆதரவானர்கள் என்பது வெளிப்படுகிறது. அகிலேஷ் யாதவ் வளர்ச்சியைப் பற்றி பேசுவார்.

வளர்ச்சிக்காக அவர் பங்களித்த எதாவது ஒரு தொகுதியில் போட்டியிட வேண்டும் என அவருக்கு சவால் விடுக்கிறேன். அவர் மணிப்பூர் கர்ஹால் தொகுதியில் போட்டியிடப்போவதாகக் கேள்விபட்டோம். முக்கியமானத் தொகுதியில் போட்டியிடுவதற்குக்கூட அவருக்கு தைரியம் கிடையாது.

தேர்தலில் அவருக்கு பாஜக கடுமையான போட்டியைத் தரும். அதன்பிறகு, அவர் சைக்கிள் ஓட்டுவதற்கே மறந்துவிடுவார்.

பாஜகவைப் போல எந்தவொரு கட்சியும் வளர்ச்சிக்காகப் பணியாற்றியிருக்காது" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.