
இந்தியாவிற்கு எதிரான கருத்துக்களைப் பதிவிட்டு வந்ததாக பாகிஸ்தான் நாட்டின் 35 யூடியூப் சேனல்கள் மற்றும் 2 இணையதளங்களை மத்திய அரசு முடக்கியுள்ளது.
பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் 35 யூடியூப் சேனல்கள் இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்தை மேற்கொண்டு வருவதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறைக்கு தகவல் கிடைத்தது.
அதனைத் தொடர்ந்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை விசாரணை மேற்கொண்டது.
இந்நிலையில் அத்துறையின் கூடுதல் செயலாளர் விக்ரம் சாகே பாகிஸ்தானைச் சேர்ந்த 35 யூடியூப் சானல்கள், 2 இன்ஸ்டாகிராம் மற்றும் டிவிட்டர் கணக்குகள் ஆகியவற்றுடன் 2 இணைய தளங்களையும் முடக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
முன்னதாக, கடந்த கடந்த டிச.21 ஆம் தேதி பாகிஸ்தான் நாட்டின் 20 யூடியூப் சேனல்கள் மற்றும் 2 இணையதளங்களை மத்திய அரசு முடக்கியது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.