நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்த நாளை முன்னிட்டு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோர் மரியாதை செலுத்தியுள்ளனர்.
குடியரசுத் தலைவர் ட்விட்டர் பதிவு:
"நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்தநாளில் அவருக்கு இந்தியா நன்றியுடன் மரியாதை செலுத்துகிறது. ஆசாத் ஹிந்த் - சுதந்திர இந்தியாவுக்கான தனது தீவிர உறுதிப்பாட்டை நிறைவேற்ற அவர் எடுத்த துணிச்சலான நடவடிக்கைகள் அவரை தேசிய அடையாளமாக மாற்றியது. அவரது லட்சியமும், தியாகமும் ஒவ்வொரு இந்தியருக்கும் என்றும் ஊக்கமளிக்கும்."
இதையும் படிக்க | இந்தியா கேட் பகுதியில் நேதாஜிக்கு சிலை
பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் பதிவு:
"நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாளில் அவருக்குத் தலை வணங்குகிறேன். நமது நாட்டிற்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்பிற்காக ஒவ்வொரு இந்தியரும் பெருமிதம் கொள்கிறார்கள்."
முன்னதாக, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 125-வது பிறந்த தின நூற்றாண்டை நாடு கொண்டாடி வரும் வேளையில், கிரானைட்டால் செய்யப்பட்ட அவரது பிரமாண்ட சிலை இந்தியா கேட் பகுதியில் நிறுவப்படவுள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி கடந்த 21-ம் தேதி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.