பஹ்ரைன் துறைமுகத்தில் ஈரான் தாக்குதல்!டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

தேசியவாத காங். தலைவர் சரத் பவாருக்கு கரோனா

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு திங்கள்கிழமை கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் (கோப்புப்படம்)
Updated On :24 ஜனவரி 2022, 9:37 am

DIN

தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு திங்கள்கிழமை கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் கரோனா மூன்றாம் அலை பரவியுள்ள நிலையில், பல்வேறு அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். தற்போது சரத் பவாருக்கு கரோனா இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து சரத் பவார் டிவிட்டரில் வெளியிட்ட செய்தியில்,

“எனக்கு கரோனா இருப்பது உறுதியாகியுள்ளது. நலமாக உள்ளேன். எனது மருத்துவரின் ஆலோசனைகளை பின்பற்றி வருகின்றேன்.

கடந்த சில நாள்களில் என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் கரோனா பரிசோதனை மற்றும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன்.”

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.