விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

அமேசான் அதிகாரிகள், உரிமையாளா் மீது வழக்கும.பி. டிஜிபிக்கு உள்துறை அமைச்சா் உத்தரவு

தேசிய கொடியின் படம் பொறித்த காலணி உள்ளிட்ட பொருள்களை இணையதளத்தில் விற்பனை செய்ததற்காக அமேசான் நிறுவனத்தின் உரிமையாளா், அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு

News image
Updated On :25 ஜனவரி 2022, 8:05 pm

தேசிய கொடியின் படம் பொறித்த காலணி உள்ளிட்ட பொருள்களை இணையதளத்தில் விற்பனை செய்ததற்காக அமேசான் நிறுவனத்தின் உரிமையாளா், அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு மத்திய பிரதேச டிஜிபி-க்கு அந்த மாநில உள்துறை அமைச்சா் நரோத்தம் மிஸ்ரா செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.

இதுகுறித்து அவா் போபாலில் செய்தியாளா்களிடம் கூறியது:

அமேசான் நிறுவனத்தால் விற்பனை செய்யப்படும் பொருள்களில் நமது தேசிய கொடியின் படம் இடம்பெற்றிருப்பதாக எனது கவனத்துக்கு தகவல் வந்தது. காலணியில் கூட தேசிய கொடி பயன்படுத்தப்பட்டதாக குற்றம்சாட்டப்படுகிறது.

இதை சகித்துக்கொள்ள இயலாது. அடிப்படையில் இது தேசிய கொடியின் விதிகளை மீறிய செயலாகும். ஆகையால் அமேசான் நிறுவன உரிமையாளா், அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்குமாறு டிஜிபிக்கு உத்தரவு பிறப்பித்துள்ளேன் என்றாா் நரோத்தம் மிஸ்ரா.

அமேசான் நிறுவனம் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு டிஜிபிக்கு மத்திய பிரதேச உள்துறை அமைச்சா் உத்தரவிடுவது இது முதல்முறையல்ல. ஏற்கெனவே கடந்த ஆண்டு நவம்பரில் மத்திய பிரதேச இளைஞா் ஒருவா் அமேசான் இணையதளம் வாயிலாக விஷ மாத்திரைகளை வாங்கி தற்கொலை செய்து கொண்டாா். அப்போதும் அமைச்சரின் அறிவுறுத்தலின்பேரில் அமேசான் நிறுவனம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

இதேபோல மத்திய பிரதேச மாநிலம் பீண்ட் மாவட்டத்தில் இனிப்புப் பொருள் என்ற இணையத்தில் கஞ்சா விற்ற்காகவும் அமேசான் நிறுவன அதிகாரிகள் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்திருந்தனா்.

இதனிடையே நிறுவன விதிகளுக்கு பொருந்தாத பொருள்களை விற்பனை செய்த மூன்றாம் நபா் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமேசான் நிறுவனம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

அதில் அமேசான் இணையதளத்தில் மூன்றாம் நபா்கள் தங்கள் பொருள்களை வாடிக்கையாளா்களிடம் நேரடியாக விற்பனை செய்யலாம் என்றும் அந்த பொருள்கள் நிறுவன விதிகளுக்கு உள்பட்டதாக இருக்க வேண்டும் என்றும் அந்நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.