கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ஒடிசாவில் மேலும் 5,891 பேருக்கு கரோனா: 7 பேர் பலி

ஒடிசாவில் இன்று புதிதாக மேலும் 5,891 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

News image
Updated On :25 ஜனவரி 2022, 7:47 am

DIN

ஒடிசாவில் இன்று புதிதாக மேலும் 5,891 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

இதுதொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி, 

புதிதாக நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்களைத் தொடர்ந்து மாநிலத்தில் மொத்த பாதிப்பு 12,17,842 ஆக உயர்ந்துள்ளது. 

7-க்கும் மேற்பட்டோர் கரோனா காரணமாக உயிரிழந்த நிலையில், மொத்த பலி எண்ணிக்கை 8,532 ஆக உயர்ந்துள்ளது. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நோயிலிருந்து மீண்டுள்ளனர். இதையடுத்து மொத்தம் 11,31,917 இதுவரை குணமடைந்தனர். 

கடந்த 24 மணி நேரத்தில் பாதிப்பு விகிதம் 9.85 ஆக உள்ளது.  மேலும் ஒரேநாளில் 59,807 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டது. புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களில் 852 பேர் குழந்தைகள் ஆவர். 

குர்தாவுடன் சுந்தர்கர் மற்றும் கட்டாக் ஆகிய மாவட்டங்களில் நோய்த்தொற்றுகளின் எண்ணிக்கை 2,500-க்கும் அதிகமாக உள்ளதால் சிவப்பு மண்டலமாகவும், பாலசோர், ஜாஜ்பூர் மற்றும் சம்பல்பூர் ஆகிய 15 மாவட்டங்கள் மஞ்சள் மண்டலத்தில் 1,000 க்கும் மேற்பட்ட பாதிப்புகளுடன் உள்ளன.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.