நாட்டில் புதிதாக 2.86 லட்சம் பேருக்கு கரோனா; 573 பேர் பலி
நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,86,384 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.


நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 2,86,384 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரு நாளில் மட்டும் 573 பேர் உயிரிழந்தனர்.
கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அடங்கிய விவரங்களை மத்திய சுகாதாரத் துறை இன்று (ஜன.27) வெளியிட்டது. அதில் ஒரு நாளில் மட்டும் 2,86,384 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை மொத்தமாக பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,03,71,500-ஆக அதிகரித்துள்ளது.
புதிதாக 573 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை மொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,91,700ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 3,06,357 பேர் கரோனாவிலிருந்து குணமடைந்தனர். நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டு 22,02,472 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
நாட்டில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் விகிதம் 19.59 சதவிகிதமாக அதிகரித்துள்ளது. சிகிச்சை பெறுவோர் விகிதம் 5.46 சதவிகிதமாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...