இமாச்சலில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.4ஆக பதிவு

இமாச்சலில் வியாழக்கிழமை இரவு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 3.4 அலகாக இந்த நிலநடுக்கம் பதிவானது.
இமாச்சலில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.4ஆக பதிவு
இமாச்சலில் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் 3.4ஆக பதிவு

இமாச்சலில் வியாழக்கிழமை இரவு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 3.4 அலகாக இந்த நிலநடுக்கம் பதிவானது.

இது தொடா்பாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது, ‘பூமிக்கு கீழே 5 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. வியாழக்கிழமை இரவு 9.13 மணியளவில் இந்த நிலநடுக்கம் தர்மசாலாவின் பல பகுதிகளில் உணரப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகளோ, பெரிய அளவில் பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com