இமாச்சலில் வியாழக்கிழமை இரவு மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டா் அளவுகோலில் 3.4 அலகாக இந்த நிலநடுக்கம் பதிவானது.
இது தொடா்பாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாவது, ‘பூமிக்கு கீழே 5 கி.மீ. ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. வியாழக்கிழமை இரவு 9.13 மணியளவில் இந்த நிலநடுக்கம் தர்மசாலாவின் பல பகுதிகளில் உணரப்பட்டது’ என்று தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிக்க | துல்கர் சல்மானின் ‘ஹே சினாமிகா’ பாடல் வெளியீடு
இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்புகளோ, பெரிய அளவில் பொருள் சேதமோ ஏற்பட்டதாக தகவல் இல்லை.