இந்தியாவிடமிருந்து பிரமோஸ் ஏவுகணைகளை வாங்கும் பிலிப்பின்ஸ்

இந்தியாவிலிருந்து முதன்முறையாக பிரமோஸ் வகை ஏவுகணையை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தம் பிலிப்பின்ஸ் அரசுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்தியாவிடமிருந்து பிரமோஸ் ஏவுகணையை வாங்கும் பிலிப்பின்ஸ்
இந்தியாவிடமிருந்து பிரமோஸ் ஏவுகணையை வாங்கும் பிலிப்பின்ஸ்
Published on
Updated on
1 min read

இந்தியாவிலிருந்து முதன்முறையாக பிரமோஸ் வகை ஏவுகணையை ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தம் பிலிப்பின்ஸ் அரசுடன் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தியா-ரஷியா கூட்டுத்தயாரிப்பில் உருவாக்கப்படும் பிரமோஸ் வகை ஏவுகணை நாட்டின் பாதுகாப்புத் துறையில் முக்கியப் பங்காற்றி வருகிறது. கப்பல், நீர்மூழ்கிக் கப்பல்கள், போர் விமானங்கள் மற்றும் நிலப்பரப்பிலிருந்து ஏவும் வகையில் தயாரிக்கப்படும் இந்த வகை ஏவுகணைகளை பிரமோஸ் ஏரோஸ்பேஸ் பிரைவேட் லிமிடெட் எனும் இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பின் நிறுவனம் தயாரித்து வருகிறது. 

இந்நிலையில் நாட்டில் முதல்முறையாக இவ்வகை ஏவுகணைகளை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் ஒப்பந்தத்தை மத்திய அரசு மேற்கொண்டுள்ளது. பிலிப்பின்ஸ் அரசுடன் 37.4 கோடி அமெரிக்க டாலர்கள் மதிப்பில் ஏற்படுத்தப்பட்டுள்ள இந்த ஒப்பந்தமானது இருதரப்பு அதிகாரிகள் மத்தியில் வெள்ளிக்கிழமை கையெழுத்தானது.

கரையிலிருந்து செலுத்தப்பட்டு இலக்கைத் தாக்கி அழிக்கும் வகையிலான பிரமோஸ் ஏவுகணைகளின் ஏற்றுமதி எண்ணிக்கை குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. 

சீனாவுடன் எல்லைப் பிரச்னை நிலவி வரும் அருணாச்சலப் பிரதேசம் மற்றும் லடாக் உள்ளிட்ட பதற்றம் நிறைந்த பகுதிகளில் ஏற்கெனவே பிரமோஸ் வகை ஏவுகணைகள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com