மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

ராகுல் காந்தி ஒரு பொய்யான காந்தி: பாஜக அமைச்சர் குற்றச்சாட்டு

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பொய்யான காந்தி என்று கிராமப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் குற்றம் சாட்டியுள்ளார். 

News image

ராகுல் காந்தி / கிரிராஜ் சிங்

Updated On :30 ஜனவரி 2022, 1:52 pm


காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பொய்யான காந்தி என்று கிராமப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கிரிராஜ் சிங் குற்றம் சாட்டியுள்ளார். 

காந்தியின் கனவுகள் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சியில் மட்டுமே நிஜமாக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார். 

உத்தரப் பிரதேச மாநிலம் காஜியாபாத்தில் பாஜகவை ஆதரித்து அமைச்சர் கிரிராஜ் சிங் பிரசாரத்தில் ஈடுபட்டார். 

அப்போது மக்களிடையே பேசிய அவர், ராகுல் காந்தி ஒரு பொய்யான காந்தி. நாட்டின் நலன் குறித்த காந்தியின் கனவுகள் பாஜக ஆட்சியின் நனவாக்கப்பட்டு வருகிறது. முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் மாநில வளர்ச்சிக்காக செயல்பட்டு வருவதாகவும் கூறினார்.  

403 தொகுதிகளைக் கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்திற்கு சட்டப்பேரவைத் தேர்தல் பிப்ரவரி 10-ம் தேதி தொடங்கி மார்ச் 7-ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. மார்ச் 10-ம் தேதி வாக்குகள் எண்ணப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.