சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

பெங்களூருவில் மாற்றுத்திறனாளி பெண்ணை தாக்கிய போக்குவரத்து அதிகாரி இடைநீக்கம்

பெங்களூருவில் மாற்றுத்திறனாளி பெண்ணை தாக்கிய போக்குவரத்து காவல் அதிகாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

News image
Updated On :31 ஜனவரி 2022, 4:36 am

DIN

பெங்களூருவில் மாற்றுத்திறனாளி பெண்ணை தாக்கிய போக்குவரத்து காவல் அதிகாரி பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

பெங்களூருவில் கடந்த 24ஆம் தேதி நோ பார்க்கிங் பகுதியில் இருந்த காரை இழுத்துச் செல்ல முயன்றபோது மாற்றுத்திறனாளி பெண் மஞ்சுளாவுக்கும் போக்குவரத்து ஏஎஸ்ஐ நாராயணனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. 

அப்போது ஏஎஸ்ஐ நாராயணனை கற்களை கொண்டு மாற்றுத்திறனாளி பெண் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த போக்குவரத்து அதிகாரி அந்தப் பெண்ணை சரமாரியாக தாக்கினார். இதுதொடர்பான விடியோ இணைய தளங்களில் வைரலானது. 

இந்த நிலையில் மாற்றுத்திறனாளி பெண்ணை தாக்கிய போக்குவரத்து காவல் அதிகாரி நாராயணன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். அதேசமயம் இச்சம்பவம் தொடர்பாக மாற்றுத்திறனாளி பெண் மஞ்சுளாவையும் காவல்துறையினர் கைது செய்தனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.