நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றும்போது திருக்குறளை மேற்கோள் காட்டினார்.
நாட்டில் கரோனா தொற்று பரவி வரும் நிலையில், நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் திங்கள்கிழமை தொடங்கியது. ஆண்டின் முதலாவது கூட்டத்தொடா் என்பதால், மக்களவை, மாநிலங்களவை உறுப்பினா்களின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் இன்று உரையாற்றினார்.
இதையும் படிக்க | குடியரசுத் தலைவர் உரையுடன் பட்ஜெட் தொடர் தொடக்கம்
அப்போது மத்திய அரசின் கல்வித் திட்டங்கள் குறித்து பேசும்போது ‘கற்க கசடற கற்பவை கற்றபின் நிற்க அதற்குத் தக’ என்ற கல்வி அதிகாரத்தில் உள்ள திருவள்ளுவரின் குறளை மேற்கோள் காட்டிப் பேசினார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த 5வது முறையாக பட்ஜெட் தொடரில் உரையாற்றினார். இந்தாண்டுடன் அவரது பதவிக் காலம் முடிவடையவுள்ளது குறிப்பிடத்தக்கது.