அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

பேரணிகளுக்கான தடை நீக்கப்படுமா? தேர்தல் ஆணையம் ஆலோசனை

மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பேரணிகள் நடத்துவதற்கான தடை குறித்து இந்திய தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்தியது.

News image
தேர்தல் ஆணையம் (கோப்புப்படம்)
Updated On :31 ஜனவரி 2022, 7:06 am

DIN

மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு பேரணிகள் நடத்துவதற்கான தடை குறித்து இந்திய தேர்தல் ஆணையம் இன்று ஆலோசனை நடத்தியது.

உத்தரப் பிரதேசம், உத்தரண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா சட்டப்பேரவைகளுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 10ஆம் தேதி தொடங்கவுள்ளன.

இதற்கிடையே கரோனா மூன்றாம் அலை வேகமாக பரவிய காரணத்தால் ஜனவரி 31 வரை 5 மாநிலங்களிலும் பேரணிகள், பொதுக்கூட்டங்களை நடத்த அரசியல் கட்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், வாக்குப்பதிவு தொடங்க 10 நாள்களே உள்ள நிலையில் பேரணி, பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி வழங்குவது குறித்து தலைமைத் தேர்தல் ஆணையர் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார்.

இந்த ஆலோசனையில், மத்திய சுகாதாரத்துறை செயலர், 5 மாநில சுகாதாரத்துறை செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும், பேரணிகளுக்கான தடை குறித்து இன்று மாலைக்குள் இந்திய தேர்தல் ஆணையம் அறிக்கை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.