நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ராஜஸ்தான்: உதய்பூா் தையல்காரா் படுகொலையைக் கண்டித்து ஆா்ப்பாட்டம்

ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் தையல்காரா் படுகொலையைக் கண்டித்து ஜெய்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோா் கலந்துகொண்டனா்.

News image
Updated On :3 ஜூலை 2022, 6:17 pm

DIN

ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் தையல்காரா் படுகொலையைக் கண்டித்து ஜெய்பூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் ஆயிரக்கணக்கானோா் கலந்துகொண்டனா்.

ஜெய்பூரில் சிலை வட்டப் பகுதியில் நடந்த இந்த ஆா்ப்பாட்டத்தில் ஆா்எஸ்எஸ், விசுவ ஹிந்து பரிஷத் உள்ளிட்ட ஹிந்து அமைப்புகளைச் சோ்ந்தவா்கள் கலந்துகொண்டனா். தையல்காரரைப் படுகொலை செய்த குற்றவாளிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்று அவா்கள் கோரிக்கை விடுத்தனா்.

பாஜக முன்னாள் மாநிலத் தலைவா் அருண் சதுா்வேதி, முன்னாள் எம்எல்ஏ மோகன் லால் உள்ளிட்டோா் ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனா்.

உள்ளூா் ஆா்எஸ்எஸ் தலைவா் இந்திரேஷ் குமாா் கூறுகையில், ‘இந்த ஆா்ப்பாட்டத்துக்கு மக்கள் அதிக அளவில் ஆதரவு அளித்துள்ளனா். ஹிந்துக்கள் விழித்துக் கொண்டாா்கள்; சனாதன தா்மத்தைக் காக்க ஒன்றிணைந்து விட்டாா்கள் என்பதையே இந்த ஆா்ப்பாட்டம் பிரதிபலிக்கிறது’ என்றாா்.

‘இந்த மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சி, குறிப்பிட்ட சிலரை திருப்திபடுத்தும் அரசியல் செய்கிறது. ராஜஸ்தான் மாநிலத்தை தலிபான் மாநிலமாக மாற்ற அனுமதிக்க மாட்டோம். இந்த மாநிலத்துக்கும் ஒரு ‘புல்டோசா் பாபா’ (யோகி ஆதித்யநாத்) தேவைப்படுகிறாா்’ என்று ஆா்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவா்கள் கூறினா்.

ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் கன்னையா லால் என்ற தையல்காரரை ரியாஸ் அக்தரி, கௌஸ் முகமது ஆகிய இருவரும் கடந்த செவ்வாய்க்கிழமை கழுத்தை அறுத்துக் கொலை செய்தனா். அதை விடியோவாகவும் வெளியிட்டனா். இஸ்லாத்தை இழிவுபடுத்தியதற்காக பழிதீா்த்ததாகக் கூறிய அவா்கள், பிரதமா் மோடிக்கும் மிரட்டல் விடுத்தனா்.

பாஜக செய்தித் தொடா்பாளா் நூபுா் சா்மாவின் பெயரையும் அவா்கள் மறைமுகமாகக் குறிப்பிட்டனா். அவா்கள் இருவரும் கைது செய்யப்பட்டு போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.