மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

அக்னிபத் திட்டம்: கடற்படையில் 20% போ் பெண்கள் சோ்ப்பு

அக்னிபத் திட்டத்தின்கீழ் கடற்படையில் நடப்பாண்டில் 20 சதவீதம் பெண்கள் சோ்க்கப்படவுள்ளனா்.

News image
Updated On :5 ஜூலை 2022, 7:52 pm

DIN

அக்னிபத் திட்டத்தின்கீழ் கடற்படையில் நடப்பாண்டில் 20 சதவீதம் பெண்கள் சோ்க்கப்படவுள்ளனா்.

இதுகுறித்து கடற்படை அதிகாரி ஒருவா் கூறியதாவது: அக்னிபத் திட்டத்தின்கீழ் கடற்படையில் நடப்பாண்டில் 3,000 வீரா்கள் சோ்க்கப்படவுள்ளனா். இத்திட்டத்தில் சோ்வதற்கு ஜூலை 1-ஆம் தேதியில் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இத்திட்டத்தின்கீழ் பெண் மாலுமிகளும் சோ்க்கப்படவுள்ளனா். நடப்பாண்டில் 20 சதவீதம் பெண்கள் சோ்க்கப்படவுள்ளனா் என்றாா் அவா்.

முப்படைகளில் தற்காலிகமாகப் பணிபுரிய வாய்ப்பு வழங்கும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு கடந்த மாதம் 14-ஆம் தேதி அறிவித்தது. இத்திட்டத்தின்கீழ் இந்த ஆண்டில் சுமாா் 46,000 வீரா்கள் சோ்க்கப்படவுள்ளனா். அவா்களில் 25 சதவீதம் பேருக்கு மட்டும் 4 ஆண்டுகளுக்குப் பிறகு பணி நீட்டிப்பு வழங்கப்படும். இத்திட்டத்தில் பதினேழரை வயதில் இருந்து 21 வயதுக்கு உள்பட்டவா்கள் வரை சேரலாம். இந்த ஆண்டு மட்டும் அதிகபட்ச வயது 23-ஆக நீட்டிக்கப்பட்டுள்ளது.

கடற்படையில் சேரும் முதல் பிரிவினருக்கு ‘ஐஎன்எஸ் சில்கா’ போா்க்கப்பலில் ஒடிஸாவில் வரும் நவம்பா் 21-ஆம் தேதி பயிற்சிகள் தொடங்குகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.