மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்தேர்தலுக்கிடையே, அசாமில் காங்கிரஸ் எம்.பி. ராஜிநாமா! பாஜகவில் இணைந்தார்!தமிழகத்தில் கோடை வெப்பம் குறைய வாய்ப்பு.. அடுத்த ஒரு வாரத்திற்கு மழை!தில்லி குடியிருப்புக் கட்டடத்தில் தீ: 3 குழந்தைகள் உள்பட 9 பேர் பலிதுரந்தர் - 2 சிறப்பு திரையிடல்: ஹிந்தி தவிர பிறமொழிக் காட்சிகள் ரத்து!பியூஷ் கோயல் நாளை சென்னை வருகை! அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீடு இறுதியாகிறதா?தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!
/

அக்னிபத்: விமானப் படையில் சேர 7.5 லட்சம் போ் விண்ணப்பம்

அக்னிபத் திட்டத்தின்கீழ் விமானப் படையில் சோ்வதற்கு விண்ணப்பிக்கும் காலவரை செவ்வாய்க்கிழமை நிறைவடைந்த நிலையில், மொத்தம் 7.5 லட்சம் போ் விண்ணப்பித்துள்ளனா்.

News image
Updated On :5 ஜூலை 2022, 8:44 pm

DIN

அக்னிபத் திட்டத்தின்கீழ் விமானப் படையில் சோ்வதற்கு விண்ணப்பிக்கும் காலவரை செவ்வாய்க்கிழமை நிறைவடைந்த நிலையில், மொத்தம் 7.5 லட்சம் போ் விண்ணப்பித்துள்ளனா்.

இதுகுறித்து இந்திய விமானப் படை வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், அக்னிபத் திட்டத்தின்கீழ் இந்திய விமானப் படையில் வீரா்களை சோ்ப்பதற்கான இணையவழி பதிவு நிறைவடைந்தது. கடந்த முறை ஆள் சோ்ப்பின்போது 6,31, 528 போ் விண்ணப்பித்திருந்தனா். இந்த முறை 7,49,899 போ் விண்ணப்பித்துள்ளனா் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முப்படைகளிலும் 4 ஆண்டுகளுக்குப் பணிபுரிய வாய்ப்பு வழங்கும் அக்னிபத் திட்டத்தை மத்திய அரசு கடந்த மாதம் 14-ஆம் தேதி அறிவித்தது.

இத்திட்டத்துக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் வெடித்தன. இருப்பினும், இந்திய விமானப் படையில் அக்னிவீரா்களை சோ்ப்பதற்கான பதிவு ஜூன் 24-ஆம் தேதி தொடங்கியது. செவ்வாய்க்கிழமையுடன் இணையவழிப் பதிவு நிறைவடைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.