பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

ம.பி.யில் உரிமம் இல்லாத ஆயுதங்கள், மதுபானங்கள் பறிமுதல்

மத்தியப் பிரதேசத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு 1,300 உரிமம் இல்லாத ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக 1.73 லட்சத்துக்கும் அதிகமானோர் மீது தடுப்பு நடவடிக்கை எடுக்கப

News image
Updated On :5 ஜூலை 2022, 12:05 pm

PTI

மத்தியப் பிரதேசத்தில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு 1,300 உரிமம் இல்லாத ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக 1.73 லட்சத்துக்கும் அதிகமானோர் மீது தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

மாநிலத்தில் 16 நகர் பாலிகா நிகாம்கள், 99 நகர் பாலிகா பரிஷத்கள் மற்றும் 298 நகர் பரிஷத்கள் உள்பட 413 நகராட்சிகளுக்கு 2 கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் ஜூலை 6 மற்றும் ஜூலை 13 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. 

இந்த நிலையில், நிர்வாகம் உரிமம் இல்லாத 1,349 ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளது. மேலும், 2.58 லட்சம் பேர் உரிமம் பெற்ற ஆயுதம் வைத்திருப்பவர்கள், அருகிலுள்ள காவல் நிலையங்களில் டெபாசிட் செய்துள்ளதாகவும் அதிகாரி ஒருவர் கூறினார். 

இதுதவிர, குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீர் 1,73,714 பேர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், 20,984 ஜாமீனில் வெளிவர முடியாத கைது வாரண்டுகளும் நிறைவேற்றப்பட்டுள்ளன என்று அந்த அதிகாரி கூறினார். 

தார் மாவட்டத்தில் மட்டும் 13,096 லிட்டர்கள் உள்பட 5.82 கோடி மதிப்புள்ள 51,366 லிட்டர் மதுபானங்களை நிர்வாகம் கைப்பற்றியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.