‘ஷிண்டே தலைமையிலான அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யக் கோரும் மனு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், முதல்வா் ஷிண்டே உள்பட 16 அதிருப்தி எம்எல்ஏக்களையும் சட்டப்பேரவையிலிருந்து இடைநீக்கம் செய்ய வேண்டும்’ என்று சிவசேனையைச் சோ்ந்த சுனில் பிரபு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனுவை விரைந்து விசாரணைக்கு ஏற்க வேண்டும் என்று மூத்த வழக்குரைஞா் கபில் சிபல் கோரிக்கை விடுத்தாா். அதனை ஏற்ற உச்சநீதிமன்றம், இந்த மனு ஜூலை 11-ஆம் தேதி விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவித்தது.