தமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவுமுதல்வர் விஜய்க்கு நன்றி சொன்ன ஸோஹோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு! ஏன்?கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்
/

சாலைக்கு நடுவே குட்டி ஈன்ற யானை: மனிதாபிமானம் காத்த மனிதர்கள்

கருவுற்றிருந்த யானை ஒன்று, பிரசவ வலி ஏற்பட்டதும், பிளிறலுடன் மரையூர் சாலைப் பகுதியை வந்தடைந்தது. பிளிறிக் கொண்டே வந்த யானையைக் கண்டதும் வாகனங்கள் தொலைவிலேயே நிறுத்தப்பட்டன. 

News image

சாலைக்கு நடுவே குட்டி ஈன்ற யானை: மனிதாபிமானம் காத்த மனிதர்கள்

Updated On :7 ஜூலை 2022, 1:27 pm IST

தமிழ்நாடு - கேரள மாநிலங்களை இணைக்கும் முக்கிய சாலையில் இடுக்கி மாவட்டம் மரையூர் அருகே, சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக வாகனங்கள் அணிவகுத்து நின்றன. ஒரு வாகனத்திலிருந்தும் எந்த ஹாரன் சப்தமும் எழவில்லை. காரணம், சாலையின் நடுவே குட்டி ஈன்ற யானை மற்றும் யானைக் குட்டிக்காக.

கருவுற்றிருந்த யானை ஒன்று, பிரசவ வலி ஏற்பட்டதும், பிளிறலுடன் மரையூர் சாலைப் பகுதியை வந்தடைந்தது. பிளிறிக் கொண்டே வந்த யானையைக் கண்டதும் வாகனங்கள் தொலைவிலேயே நிறுத்தப்பட்டன. 

எந்த வாகனமும் யானையை தொல்லைக் கொடுக்காமல், சப்தம் எழுப்பாமல் அமைதி காத்தன. கடுமையான வலியால் பிளிறிக் கொண்டிருந்த யானை குட்டியை ஈன்றதும்தான் அந்த சப்தம் குறைந்தது. பிறகு, பிறந்த குட்டி யானையை, அதன் தாய் வாஞ்சையோடு தடவிக் கொடுத்து எழுந்து நிற்க வைத்து, காட்டுக்குள் செல்ல ஆயத்தமாகின.

இவ்வளவும் சுமார் ஒரு மணி நேரத்தில் நடந்தன. ஆனால், எந்த வாகனமும் அவசரம் காட்டாமல், யானைக்கு வழிவிட்டு காத்திருந்தன. யானை தனது குட்டியுடன் காட்டுக்குள் திரும்பிய பிறகுதான் வாகனங்கள் தத்தமது வழிகளில் பயணமாயின. இது தொடர்பான விடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.