ரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

திரௌபதி முர்மு குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதற்கு காரணம் இதுதானா?

குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டதற்கு வாக்கு வங்கிதான் காரணம் என சமூக ஆர்வலர் மேதா பட்கர் தெரிவித்துள்ளார்.

News image
திரௌபதி முர்மு
Updated On :7 ஜூலை 2022, 1:49 pm

DIN

குடியரசுத் தலைவர் வேட்பாளராக திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டதற்கு வாக்கு வங்கிதான் காரணம் என சமூக ஆர்வலர் மேதா பட்கர் தெரிவித்துள்ளார்.

பாஜக வாக்கு வங்கியை மையப்படுத்தியே திரௌபதி முர்முவை தங்களது குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவித்துள்ளது. அவர்களுக்கு பழங்குடியினரின் நலனில் எல்லாம் அக்கறை கிடையாது என மேதா பட்கர் தெரிவித்துள்ளார்.

தனது சொந்த கிராமத்தில் மின் இணைப்பு கொடுக்க முடியாத திரௌபதி முர்மு ஒருபுறமும், மற்றொரு பக்கத்தில் எதிர்க்கட்சிகளின் சார்பில் போட்டியிடும் பொருளாதார நிபுணர் யஷ்வந்த் சின்ஹா என இருவருமே ஆளுங்கட்சியின் திட்டங்களுக்கு கையெழுத்திடும் பதவிக்கு தான் போட்டியிடுகிறார்கள். இவர்களுக்கு இடையேயான இந்த போட்டி எனக்கு ஆச்சர்யத்தை தான் ஏற்படுத்துகிறது என மேதா பட்கர் தெரிவித்தார்.

இது குறித்து சமூக ஆர்வலர் மேதா பட்கர் கூறியதாவது: “ அவர்கள் (பாஜக) எதற்காக பழங்குடியினப் பெண்ணை குடியரசுத் தலைவராக நிறுத்த வேண்டும். அதேபோல பிர்சா முண்டா ஜெயந்தி விழாவை அவர்கள் கொண்டாடுகிறார்கள். அதற்கு காரணம் மத்திய பிரதேசம் மற்றும் சில மாநிலங்களில் பழங்குடியின மக்களின் வாக்கு வங்கி அதிகம். அதன் காரணத்தினாலேயே இவ்வாறு செயல்படுகிறார்களே தவிர உண்மையின் பழங்குடியின மக்களின் நலனுக்காக அவர்கள் செயல்படவில்லை.

மத்திய பிரதேசத்தின் போபாலில் பிரதமர் நரேந்திர மோடி பிர்சா முண்டா ஜெயந்தியில் பங்கெடுத்ததற்குக் காரணமும் வாக்கு வங்கிதான். உண்மையில், பழங்குடியின மக்களின் நலனுக்காக செயல்படுபவர்கள் அவர்களது உரிமைகளை பாதுகாக்க வேண்டும். திரௌபதி முர்மு குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டாலும் அவரால் பழங்குடியின மக்களின் நலனுக்காக என்ன செய்ய முடியும் என்பது தெரியவில்லை. அவருக்கு அதிகாரம் இருக்கின்ற போதிலும் அவர் ஆளுங்கட்சியின் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்குபவர் மட்டுமே என்பது தான் உண்மை. ” எனக் கூறியுள்ளார்.

குடியரசுத் தலைவர் பதவிக்கானத் தேர்தல் வருகிற ஜூலை 18ஆம் தேதி நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.