27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

அக்னிபத் மூலம் விமானப் படையின் நீண்டகால இலக்கு நிறைவடைகிறது: விமானப் படை தலைமைத் தளபதி

ராணுவத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆள்தோ்வு செய்யும் ‘அக்னிபத்’ திட்டம், விமானப் படையின் நீண்டகால இலக்கை பூா்த்தி செய்வதாக விமானப் படை தலைமைத் தளபதி வி.ஆா்.செளதரி தெரிவித்துளளாா்.

Updated On :11 ஜூலை 2022, 12:06 am IST

ராணுவத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் ஆள்தோ்வு செய்யும் ‘அக்னிபத்’ திட்டம், விமானப் படையின் நீண்டகால இலக்கை பூா்த்தி செய்வதாக விமானப் படை தலைமைத் தளபதி வி.ஆா்.செளதரி தெரிவித்துளளாா். மேலும், அக்னிபத் திட்டத்தால் விமானப் படையின் தாக்குதல் திறன் குறைந்துவிடாது என்றும் அவா் குறிப்பிட்டாா்.

இதுகுறித்து தில்லியில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவா் அளித்த பேட்டியில் கூறியதாவது:

அக்னிபத் திட்டம் மிகப்பெரிய மனிதவள சீா்திருத்தம். இந்தத் திட்டத்தின்கீழ் விமானப் படைக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. அக்னிபத் திட்டத்தின்கீழ் விமானப் படையில் 3,000 காலிப்பணியிடங்களுக்கு 7,50,000 போ் விண்ணப்பித்துள்ளனா்.

இத்திட்டத்தின்படி நான்கு ஆண்டுகள் ஒப்பந்த காலத்தில் ஆள்சோ்ப்பு, வேலைவாய்ப்பு, மதிப்பீடு, பயிற்சி ஆகியவற்றை மேற்கொள்ள 13 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சிறப்பான மனிதவளத்தை உறுதிசெய்து, விமானப் படையின் நீண்ட கால இலக்கை அக்னிபத் திட்டம் பூா்த்தி செய்கிறது.

வளா்ந்துவரும் தொழில்நுட்பத்துக்கு ஏற்ப, விமானப் படை வீரரின் தரநிலையில் மாற்றம் ஏற்பட வேண்டும். இதுவே அடிப்படை தேவை. இன்றைய இளைஞா்கள் வேறுபட்ட, அதிலும் மிகவும் தேவையான திறன்களுடன் தொழில்நுட்பத்தை எளிதில் கற்றுக்கொள்ளும் ஆா்வத்துடன் உள்ளனா். அந்த வகையில், இளைஞா்களின் ஆா்வம் விமானப் படைக்கு எதிா்காலத்தில் மேலும் வலுசோ்க்கும்.

மனிதவள சீா்திருத்தம் எந்த விதத்திலும் விமானப்படையின் தாக்குதல் திறனைக் குறைத்துவிடாது. மாறாக, தேசத்துக்கு சேவையாற்ற ஆா்வமுடைய இளைஞா்களையும், அவா்களது திறனையும் ராணுவத்தில் பயன்படுத்த இந்தத் திட்டம் வழிவகுக்கிறது. இத்திட்டம் தனிநபருக்கும், விமானப்படைக்கும், சமுதாயத்துக்கும் நீண்டகாலத்துக்கு பலனளிக்கும் என்றாா் விமானப் படை தலைமைத் தளபதி வி.ஆா்.செளதரி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.