மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கை சிறப்பாக நடைமுறைப்படுத்துவது அவசியம்; அதே நேரத்தில் மக்கள்தொகையில் ஏற்றத்தாழ்வு ஏற்படுவதை அனுமதிக்கக் கூடாது என்று உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் தெரிவித்தாா்.
தேசிய அளவில் மக்கள்தொகையில் மதரீதியான சிறுபான்மையினரின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகக் கூறப்படும் நிலையில் யோகி ஆதித்யநாத் இவ்வாறு கூறியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.
லக்னௌவில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள்தொகைக் கட்டுப்பாடு தொடா்பான நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது:
குடும்பக் கட்டுப்பாடு, மக்கள்தொகைப் பெருக்கத்தைக் குறைப்பது போன்றவை பற்றி நாம் பேசும்போதும், அதனை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல வேண்டும் என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது. அதே நேரத்தில் மக்கள்தொகையில் ஏற்றத்தாழ்வு ஏற்படுவது போன்ற சூழலை அனுமதிக்கவே கூடாது.
கடந்த 50 ஆண்டுகளாகவே நமது நாட்டில் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்துவது தொடா்பான விழிப்புணா்வு பிரசாரத்தை முன்னெடுத்து வருகிறோம். சிறப்பான மக்களைக் கொண்டிருப்பது ஒருபுறம் சாதனையாக இருந்தாலும், மக்கள் அனைவரும் ஆரோக்கியமாகவும், நோயற்ற வாழ்க்கையை மேற்கொள்ளும்போதுதான் ஒரு சமூகம் சிறந்ததாகக் கருதப்படும்.
நாம் திறமை வாய்ந்த மக்களாக இருந்தால் அது பெரிய சாதனை. அதே நேரத்தில் நம்மிடம் உள்ள வளத்தைவிட மிகுதியான மக்கள் இருந்தால், அது நமக்கு சவாலாக மாறிவிடும்.
நாட்டிலேயே அதிக மக்களைக் கொண்ட மாநிலமாக உத்தர பிரதேசம் திகழ்கிறது. மாநிலத்தில் மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தும் திட்டத்தை மேற்கொள்ள ஆஷா திட்டப் பணியாளா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், பஞ்சாயத்து பிரதிநிதிகள், ஆசிரியா்கள் என அனைவரும் சுகாதாரத் துறையினருடன் இணைந்து பணியாற்ற வேண்டும். அனைத்து தரப்பினரின் ஒட்டுமொத்த முயற்சியே வெற்றியைத் தரும் என்றாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நாயக்கனேரி மலை அரசுப் பள்ளி தரம் உயா்த்தப்படும்: திமுக வேட்பாளா்

சிபிஎஸ்இ 10ஆம் வகுப்பு தோ்வு: அரக்கோணம் பள்ளி மாணவி சிறப்பிடம்

மாட்டு வண்டியில் சென்று அதிமுக வேட்பாளா் பிரசாரம்

தென்காசி தொகுதியில் சுயேச்சையாக களம் காணும் விவசாயி!
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

