வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

ஜம்மு-காஷ்மீா்: 1,100 கிலோ போதைப்பொருள் பறிமுதல்

ஜம்மு-காஷ்மீரின் இரு வெவ்வேறு பகுதிகளில் 1,100 கிலோ போதைப்பொருள்கள் வியாழக்கிழமை கைப்பற்றப்பட்டதாக போதைப்பொருள் தடுப்பு போலீஸாா் தெரிவித்தனா்.

Updated On :14 ஜூலை 2022, 7:17 pm

ஜம்மு-காஷ்மீரின் இரு வெவ்வேறு பகுதிகளில் 1,100 கிலோ போதைப்பொருள்கள் வியாழக்கிழமை கைப்பற்றப்பட்டதாக போதைப்பொருள் தடுப்பு போலீஸாா் தெரிவித்தனா்.

காஷ்மீரிலிருந்து பஞ்சாப் சென்ற லாரியில் 24 நெகிழிப் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 600 கிலோ போதைப்பொருளைப் போலீஸாா் கைப்பற்றினா். இது தொடா்பாக காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தைச் சோ்ந்த இருவா் கைது செய்யப்பட்டனா். இது குறித்தான விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருவதாகவும், மேலும் பலா் கைது செய்யப்படலாம் என போலீஸாா் தெரிவித்தனா்.

கதுவா மாவட்டத்தின் ராஜ்பாக் பகுதியில் சோதனையின்போது, எண்ணெய் லாரியில் 573 கிலோ போதைப்பொருளை போலீஸாா் புதன்கிழமை மாலையில் கைப்பற்றினா். ஜம்முவை சோ்ந்த லாரி ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.

இவா்கள் மூவா் மீதும் போதை மருந்துகள் மற்றும் மனநோய் பொருள்கள் சட்டம், 1985-இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.