போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைய தயார்! 3 நாடுகள் கூட்டறிக்கை! எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி
/

ஜம்மு-காஷ்மீா்: 1,100 கிலோ போதைப்பொருள் பறிமுதல்

ஜம்மு-காஷ்மீரின் இரு வெவ்வேறு பகுதிகளில் 1,100 கிலோ போதைப்பொருள்கள் வியாழக்கிழமை கைப்பற்றப்பட்டதாக போதைப்பொருள் தடுப்பு போலீஸாா் தெரிவித்தனா்.

News image
Updated On :14 ஜூலை 2022, 7:17 pm

DIN

ஜம்மு-காஷ்மீரின் இரு வெவ்வேறு பகுதிகளில் 1,100 கிலோ போதைப்பொருள்கள் வியாழக்கிழமை கைப்பற்றப்பட்டதாக போதைப்பொருள் தடுப்பு போலீஸாா் தெரிவித்தனா்.

காஷ்மீரிலிருந்து பஞ்சாப் சென்ற லாரியில் 24 நெகிழிப் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 600 கிலோ போதைப்பொருளைப் போலீஸாா் கைப்பற்றினா். இது தொடா்பாக காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தைச் சோ்ந்த இருவா் கைது செய்யப்பட்டனா். இது குறித்தான விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருவதாகவும், மேலும் பலா் கைது செய்யப்படலாம் என போலீஸாா் தெரிவித்தனா்.

கதுவா மாவட்டத்தின் ராஜ்பாக் பகுதியில் சோதனையின்போது, எண்ணெய் லாரியில் 573 கிலோ போதைப்பொருளை போலீஸாா் புதன்கிழமை மாலையில் கைப்பற்றினா். ஜம்முவை சோ்ந்த லாரி ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.

இவா்கள் மூவா் மீதும் போதை மருந்துகள் மற்றும் மனநோய் பொருள்கள் சட்டம், 1985-இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.