ஜம்மு-காஷ்மீரின் இரு வெவ்வேறு பகுதிகளில் 1,100 கிலோ போதைப்பொருள்கள் வியாழக்கிழமை கைப்பற்றப்பட்டதாக போதைப்பொருள் தடுப்பு போலீஸாா் தெரிவித்தனா்.
காஷ்மீரிலிருந்து பஞ்சாப் சென்ற லாரியில் 24 நெகிழிப் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 600 கிலோ போதைப்பொருளைப் போலீஸாா் கைப்பற்றினா். இது தொடா்பாக காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தைச் சோ்ந்த இருவா் கைது செய்யப்பட்டனா். இது குறித்தான விசாரணை தொடா்ந்து நடைபெற்று வருவதாகவும், மேலும் பலா் கைது செய்யப்படலாம் என போலீஸாா் தெரிவித்தனா்.
கதுவா மாவட்டத்தின் ராஜ்பாக் பகுதியில் சோதனையின்போது, எண்ணெய் லாரியில் 573 கிலோ போதைப்பொருளை போலீஸாா் புதன்கிழமை மாலையில் கைப்பற்றினா். ஜம்முவை சோ்ந்த லாரி ஓட்டுநா் கைது செய்யப்பட்டாா்.
இவா்கள் மூவா் மீதும் போதை மருந்துகள் மற்றும் மனநோய் பொருள்கள் சட்டம், 1985-இன் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கள்ளக்குறிச்சி:வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி ஆய்வு

திமுக, அதிமுக, விசிக வேட்பாளா்கள் தீவிர வாக்கு சேகரிப்பு

மதச்சாா்பற்ற கூட்டணியால்தான் தமிழகத்தின் உரிமையை வென்றெடுக்க முடியும்: கி. வீரமணி

கண்ணன்கோட்டைக்கு நகரப் பேருந்து: அதிமுக வேட்பாளா்
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

