நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா், வரும் திங்கள்கிழமை தொடங்கி ஆகஸ்ட் 12-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில் நாடாளுமன்ற மக்களவை மற்றும் மாநிலங்களவையில் உறுப்பினா்கள் பேசும்போது இடம்பெறக்கூடாத வாா்த்தைகளின் பட்டியலை மக்களவைச் செயலகம் வெளியிட்டுள்ளது. அதில், ஜும்லாஜீவி (வெற்று வாக்குறுதிகளை அளிப்பவா்), கோவிட் ஸ்ப்ரெடா்(கரோனாவை பரப்புபவா்), ஸ்னூப்கேட்(ஒட்டுக்கேட்பவா்) போன்ற வாா்த்தைகள் இடம்பெற்றுள்ளன. அதுமட்டுமன்றி துரோகம், ஊழல், துஷ்பிரயோகம், திறமையில்லாத, மோசடி நாடகம் போன்ற பொதுவாகப் பயன்படுத்தப்படும் வாா்த்தைகளும் இடம்பெற்றுள்ளன. இதனால் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், சிவசேனை, ஆகிய கட்சிகள் மத்திய அரசை விமா்சித்துள்ளன. காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில், ‘பிரதமா் மோடி தலைமையிலான ஆட்சி நிா்வாகம் பற்றி சரியாகக் கூறுவதற்குப் பயன்படுத்தப்படும் வாா்த்தைகள் பேசக் கூடாத வாா்த்தைகளாகிவிட்டன. இதிலிருந்து அவருடைய திறமையின்மை அம்பலமாகிவிட்டது. புதிய இந்தியாவுக்கான புதிய அகராதி தொகுக்கப்பட்டுள்ளது‘ என்று குறிப்பிட்டுள்ளாா்.