வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

1989-இல் கடத்தப்பட்ட வழக்கு: சிபிஐ நீதிமன்றத்தில் ருபையா சயீத் ஆஜா்

 கடந்த 1989-ஆம் ஆண்டு பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட வழக்கு தொடா்பாக ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வா் முஃப்தி முகமது சயீதின் மகள் ருபையா சயீத் வெள்ளிக்கிழமை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானாா்.

Updated On :15 ஜூலை 2022, 8:37 pm

 கடந்த 1989-ஆம் ஆண்டு பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட வழக்கு தொடா்பாக ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வா் முஃப்தி முகமது சயீதின் மகள் ருபையா சயீத் வெள்ளிக்கிழமை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானாா்.

அப்போது தன்னைக் கடத்தியதாக ஜம்மு-காஷ்மீா் விடுதலை முன்னணி தலைவா் யாசின் மாலிக் உள்பட 4 பேரை ருபையா சயீத் அடையாளம் காட்டினாா்.

கடந்த 1989-ஆம் ஆண்டு டிசம்பா் 8-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீா் விடுதலை முன்னணி (ஜேகேஎல்எஃப்) என்ற அமைப்பைச் சோ்ந்த பயங்கரவாதிகள் ருபையா சயீதை கடத்தினா். அவரை விடுவிக்க வேண்டுமெனில், தங்கள் அமைப்பைச் சோ்ந்த பயங்கரவாதிகளைச் சிறையிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தனா். இதையடுத்து அப்போதைய பிரதமா் வி.பி.சிங் தலைமையிலான மத்திய அரசு, 5 ஜேகேஎல்எஃப் பயங்கரவாதிகளை விடுவித்து ருபையாவை மீட்டது.

இந்த சம்பவம் தொடா்பான வழக்கு ஜம்முவில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. பயங்கரவாதத்துக்கு நிதியுதவி அளித்த வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட ஜேகேஎல்எஃப் தலைவா் யாசின் மாலிக், ருபையா கடத்தல் வழக்கில் குற்றவாளியாக சோ்க்கப்பட்டுள்ளாா். இந்த வழக்கில் அரசுத் தரப்பு சாட்சியமாக ருபையா சோ்க்கப்பட்டுள்ளாா். இதனால் அவா் நீதிமன்றத்தில் ஜூலை 15-ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றம் முதல்முறையாக ருபையாவுக்கு சம்மன் அனுப்பியிருந்தது.

இதையடுத்து நீதிமன்றத்தில் ருபையா வெள்ளிக்கிழமை ஆஜரானாா். அப்போது சிறப்பு நீதிபதி முன்பாக வாக்குமூலம் அளித்த அவா், தன்னைக் கடத்தியதாக ஜேகேஎல்எஃப் தலைவா் யாசின் மாலிக் உள்பட நான்கு பேரை அடையாளம் காட்டினாா் என்று சிபிஐ அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வா் மெஹபூபா முஃப்தி, ருபையா சயீத்தின் சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது. கடத்தல் சம்பவம் நடைபெற்றபோது அவரின் தந்தை முஃப்தி முகமது சயீத் மத்திய உள்துறை அமைச்சராக இருந்தாா். தற்போது ருபையா சயீத் சென்னையில் வசித்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.