நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணிமக்களவைத் தொகுதிகளை 850-ஆக உயா்த்தும் சட்டத் திருத்த மசோதா: நாடாளுமன்றத்தில் நாளை அறிமுகம்மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

இலங்கை விவகாரம்: நாளை மறுநாள் அனைத்துக் கட்சி கூட்டம்

இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி குறித்து ஆலோசிக்க மத்திய அரசு சார்பில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :17 ஜூலை 2022, 10:59 am

இலங்கையில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி குறித்து ஆலோசிக்க மத்திய அரசு சார்பில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

நாடாளுமன்ற கூட்டுத் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக திமுக மற்றும் அதிமுக சார்பில் இலங்கையில் நிலவி வரும் கடுமையான பொருளாதார நெருக்கடி குறித்து ஆலோசிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும், இலங்கையில் இருக்கும் தமிழர்களின் நிலை குறித்தும் முடிவு எடுக்க  வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து  இன்று (ஜூலை 17) பேசிய அதிமுக தலைவர் தம்பிதுரை, இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடியில் இந்தியா தலையிட்டு தீர்வு காண வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோல இக்கட்டான சூழலில் சிக்கித் தவித்து வரும் தீவு நாடான இலங்கையின்  விவகாரத்தில் இந்தியா தலையிட்டு தீர்வு காண வேண்டும் என திமுக தலைவர் டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை கடந்த 70 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் திணறி வருகிறது. இலங்கையில் அந்நிய செலாவணிக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. அதே போல உணவு மற்றும் எரிபொருள்களின் விலைவும் கடுமையாக உயர்ந்துள்ளது.

இந்நிலையில், இலங்கை விவகாரம் குறித்து ஆலோசிக்க நாளை மறுநாள் அனைத்துக் கட்சி ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.