போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிஈரானுக்கு எதிராக அமெரிக்காவுடன் இணைய தயார்! 3 நாடுகள் கூட்டறிக்கை! எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி
/

ஜம்மு-காஷ்மீர் எல்லையில் குண்டுவெடிப்பு: ராணுவ அதிகாரிகள் இருவர் பலி

ஜம்மு-காஷ்மீரின், பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைப் பகுதியில் கையெறி குண்டு வெடித்ததில் ராணுவ தலைவர் மற்றும் ஜூனியர் கமிஷன் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர். 

News image
கோப்புப்படம்
Updated On :18 ஜூலை 2022, 7:08 am

DIN

ஜம்மு-காஷ்மீரின், பூஞ்ச் மாவட்டத்தில் எல்லைப் பகுதியில் கையெறி குண்டு வெடித்ததில் ராணுவ தலைவர் மற்றும் ஜூனியர் கமிஷன் அதிகாரி ஒருவர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர். 

ஞாயிற்றுக்கிழமை இரவு இந்திய ராணுவ வீரர்கள் மெந்தர் செக்டார் பகுதியில் பணியில் இருந்தபோது இந்த குண்டு வெடிப்பு நிகழ்ந்துள்ளது. 

இந்த குண்டுவெடிப்பில் கேப்டன் ஆனந்த் மற்றும் கேஜிஓ நைப் சுபேதார் பகவான் சிங் ஆகியோருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக உதம்பூரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவர்கள் இருவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். 

பிகாரின் பகல்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த சம்பா நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் கேப்டன் ஆனந்த், உத்தரப் பிரதேச மாநிலம் அம்பேத்கர் நகர் மாவட்டத்தில் உள்ள போகர் பிட்டா கிராமத்தைச் சேர்ந்தவர் நைப் சுபேதார் பகவான் சிங்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.