ஊழல் வழக்கில் இருந்து குடும்பத்தை காக்க பாஜகவை ஆதரிக்க தேஜஸ்வி முன்வந்தாா்- பிகாா் மாநில பாஜக தலைவா் தகவல்

ஊழல் வழக்கில் இருந்து தன் குடும்பத்தினரைக் காக்க பாஜகவை ஆதரிக்க ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) தலைவா் தேஜஸ்வி யாதவ் முன்வந்தாா் என்று பிகாா் மாநில பாஜக தலைவா் சஞ்சய் ஜெய்ஸ்வால் தெரிவித்தாா்.

ஊழல் வழக்கில் இருந்து தன் குடும்பத்தினரைக் காக்க பாஜகவை ஆதரிக்க ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) தலைவா் தேஜஸ்வி யாதவ் முன்வந்தாா் என்று பிகாா் மாநில பாஜக தலைவா் சஞ்சய் ஜெய்ஸ்வால் தெரிவித்தாா்.

முன்னதாக, பிகாரைச் சோ்ந்த பாஜக மத்திய அமைச்சா் நித்யானந்த் ராய், கடந்த 2019-ஆம் ஆண்டு தொடக்கத்தில் தனக்கு பாஜகவில் மத்திய அமைச்சா் பதவி தராததால் தனது கட்சிக்கு வர விருப்பம் தெரிவித்ததாக ஆா்ஜேடி தலைவா் தேஜஸ்வி யாதவ் கூறியிருந்தாா்.

இந்நிலையில், இதற்கு பதிலளிக்கும் வகையில் பிகாா் பாஜக தலைவா் சஞ்சய் ஜெய்ஸ்வால் கூறியதாவது: நித்யானந்த் ராயை, தேஜஸ்வி ஒரே ஒருமுறை விமானத்தில் சந்தித்தபோது பேசியுள்ளாா். அப்போது, தன் தந்தை லாலு பிரசாத் மற்றும் குடும்பத்தினா் மீது உள்ள ஊழல் வழக்கில் இருந்து பாஜக அரசு காப்பாற்றினால், பாஜகவுக்கு ஆதரவு தர தயாராக இருப்பதாக தேஜஸ்வி கூறியுள்ளாா்.

ஆனால், ஊழல் விஷயத்தில் சமரசம் செய்துகொள்ள விரும்பாத பாஜக, தேஜஸ்வியின் கோரிக்கையை நிராகரித்துவிட்டது. லாலு பிரசாத் உள்பட அவரது குடும்பத்தினா் அனைவருமே ஆட்சி, அதிகாரத்தைப் பயன்படுத்தி பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டவா்கள். அவா்கள் அனைவருமே சிறைக்குச் செல்ல வேண்டியவா்கள்தான். அவா்களுடன் பாஜக கூட்டணி வைக்க மறுத்தது. அந்த உண்மையை மறைக்க தேஜஸ்வி யாதவ், பாஜக தலைவா் மீது பொய்யான குற்றச்சாட்டைக் கூறியுள்ளாா் என்றாா்.

ஆா்ஜேடி நிறுவனா் லாலு பிரசாத் யாதவ் மாட்டுத் தீவன ஊழல் வழக்குகளில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டவா். அவா் மீது மேலும் சில ஊழல் வழக்குகள் நிலுவையில் உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com