டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

உத்தரப் பிரதேசம்: ரயிலில் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட தம்பதி

உத்தரப் பிரதேசத்தின் சேலம்பூர் ரயில் நிலையத்தில் தம்பதி ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

News image
கோப்புப் படம்
Updated On :21 ஜூலை 2022, 10:16 am

DIN

உத்தரப் பிரதேசத்தின் சேலம்பூர் ரயில் நிலையத்தில் தம்பதி ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டது அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

கடந்த சில ஆண்டுகளாக தீபக் யாதவ் (25 வயது), ராஜ்பார் (22 வயது) இருவரும் உத்தரப் பிரதேசத்தின் ராம்பூர் பச்சூர் கிராமத்தில் சேர்ந்து வாழ்ந்துள்ளனர் என காவல் துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

நேற்று முன் தினம் (ஜூலை 19) அன்று காலை இந்தத் தம்பதி அவர்களது வீட்டை விட்டு புறப்பட்டு மறுநாள் (ஜூலை 20) கோபால்பூர் கிராமத்தை வந்தடைந்ததாக கூறப்படுகிறது. அவர்கள் இருவரும் வாராணசியில் இருந்து வந்த ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனை காவல் ஆய்வாளர் சங்கல்ப் சர்மா உறுதிப்படுத்தியுள்ளார்.  

இந்த தம்பதியின் உடல்கள் உடற்கூறாய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக மேற்கொண்டு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.