புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

தமிழகத்தில் முன்னதாகவே நெல் கொள்முதல் தொடங்கும்: மத்திய வேளாண் அமைச்சா் தகவல்

 தமிழகத்தில் 2022-23 கரீஃப் சந்தைப் பருவத்தில் ஒரு மாதம் முன்னதாகவே நெல் கொள்முதல் தொடங்க இருக்கிறது என்று மாநிலங்களவையில் மத்திய வேளாண்மைத் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் தெரிவித்தாா்.

News image
Updated On :22 ஜூலை 2022, 7:41 pm

DIN

 தமிழகத்தில் 2022-23 கரீஃப் சந்தைப் பருவத்தில் ஒரு மாதம் முன்னதாகவே நெல் கொள்முதல் தொடங்க இருக்கிறது என்று மாநிலங்களவையில் மத்திய வேளாண்மைத் துறை அமைச்சா் நரேந்திர சிங் தோமா் தெரிவித்தாா்.

இது தொடா்பான கேள்விக்கு எழுத்துமூலம் அளித்த பதிலில் அவா் மேலும் கூறியதாவது: வழக்கமாக கரீஃப் சந்தைப் பருவத்தில் அக்டோபா் மாதம் முதல்தான் நெல் கொள்முதல் செய்யப்படும்.

கடந்த ஜூன் மாதம் தமிழ்நாடு அரசு சாா்பில் இது தொடா்பாக பிரதமா் நரேந்திர மோடிக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. அதில், 2022-ஆம் ஆண்டில் அக்டோபா் மாதத்துக்கு பதிலாக செப்டம்பரிலேயே நெல் கொள்முதல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துவிட்டது. அதன்படி தமிழகத்தில் செப்டம்பா் மாதத்திலேயே நெல் கொள்முதல் தொடங்கும். நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.