வான்கடேயில் மும்பையை வீழ்த்தி பஞ்சாப் அபாரம்!இஸ்ரேல் - லெபனான் இடையே போர் நிறுத்தம் - டிரம்ப் அறிவிப்பு!ஈரானுக்கு ஆயுதங்கள் அனுப்பப்படாது: அமெரிக்காவுக்கு சீனா உத்தரவாதம்!வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்
/

ஜம்முவில் திருமண விழாவிற்கு சென்றவருக்கு நேர்ந்த பரிதாபம்: நால்வர் பலி

ஜம்முவின் சம்பா மாவட்டத்தில் இரண்டு வாகனங்கள் மோதிய விபத்தில் 3 குழந்தைகள் உள்பட நால்வர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயமடைந்தனர். 

News image
Updated On :23 ஜூலை 2022, 6:24 am

ஜம்முவின் சம்பா மாவட்டத்தில் இரண்டு வாகனங்கள் மோதிய விபத்தில் 3 குழந்தைகள் உள்பட நால்வர் உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயமடைந்தனர். 

இந்த விபத்து சம்பவம் வெள்ளிக்கிழமை இரவு 11.50 மணியளவில் நடைபெற்றது. திருமண விழாவைச் சேர்ந்த 19 பேரை ஏற்றிச் சென்ற டெம்போ லாரியுடன் மோதியது. 

இந்த விபத்தில் 3 குழந்தைகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 15 பேர் காயமடைந்த நிலையில், சம்பா மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். படுகாயமடைந்த ஏழு பேர் சிறப்புச் சிகிச்சைக்காக ஜம்முவில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இறந்தவர்கள் சுமன் தேவி 40, ராகுல் 8, அவரது சகோதரி முஸ்கான் 5 மற்றும் கிரிஷ், 5 என அடையாளம் காணப்பட்டனர்.

அவர்கள் அனைவரும் சம்பா மாவட்டத்தின் ஜஸ்வால் மண்டலில் வசிப்பவர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.