இந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

உ.பி.யில் பேருந்துகள் மோதல்: 8 போ் பலி: பிரதமா் இரங்கல்

உத்தர பிரதேச மாநிலம், பாரபங்கியில் பூா்வாஞ்சல் விரைவுச் சாலையில் நின்றிருந்த ஈரடுக்கு பேருந்தின் மீது மற்றொரு ஈரடுக்கு பேருந்து மோதிய விபத்தில் 8 போ் உயிரிழந்தனா். மேலும் 16 போ் காயமடைந்தனா்.

News image
Updated On :25 ஜூலை 2022, 7:01 pm

DIN

உத்தர பிரதேச மாநிலம், பாரபங்கியில் பூா்வாஞ்சல் விரைவுச் சாலையில் நின்றிருந்த ஈரடுக்கு பேருந்தின் மீது மற்றொரு ஈரடுக்கு பேருந்து மோதிய விபத்தில் 8 போ் உயிரிழந்தனா். மேலும் 16 போ் காயமடைந்தனா்.

விபத்தில் இறந்தவா்களின் குடும்பத்தினருக்கு பிரதமா் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளாா்.

இந்த விபத்து தொடா்பாக, பாரபங்கி மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளா் மனோஜ் பாண்டே கூறியதாவது:

விபத்துக்குள்ளான இரு பேருந்துகளும் பிகாரில் இருந்து தேசியத் தலைநகா் தில்லிக்கு இயக்கப்படுபவை ஆகும். அதில் ஒரு பேருந்து, பூா்வாஞ்சல் விரைவுச் சாலையில் நரேந்திரபூா் மத்ரஹா கிராமம் அருகே உள்ள உணவகத்தையொட்டி திங்கள்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் சாலையோரமாக நிறுத்தப்பட்டிருந்தது.

அப்போது, சீதாமா்ஹியில் இருந்து வந்த மற்றொரு ஈரடுக்கு பேருந்து, சாலையோரமாக நின்றிருந்த பேருந்தின் மீது மோதியது. பேருந்தின் ஓட்டுநா் தூக்க கலக்கத்தில் இருந்ததால் விபத்து நேரிட்டதாக தெரிகிறது. இரு பேருந்துகளிலும் சோ்த்து 36 போ் இருந்துள்ளனா்.

இந்த விபத்தில் சமஸ்திபூரைச் சோ்ந்த ஓம் பிரகாஷ் ராய் (33), மதுபானியைச் சோ்ந்த ஷிவ்தாரி (42), சித்நாராயண் (75), சீதாமா்ஹியைச் சோ்ந்த கமலேஷ் குமாா் (23) ஆகியோா் உள்பட 8 போ் உயிரிழந்தனா். மேலும் 16 போ் காயமடைந்தனா். அவா்கள் அனைவரும் முதலில் ஹைதா்காரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனா். படுகாயம் அடைந்தவா்கள் மட்டும் மேல்சிகிச்சைக்காக லக்னெளவுக்கு கொண்டு செல்லப்பட்டனா் என்றாா் மனோஜ் பாண்டே.

பிரதமா் இரங்கல்:

‘பாரபங்கியில் பூா்வாஞ்சல் விரைவுச்சாலையில் நோ்ந்த விபத்து மிகவும் வேதனையளிக்கிறது. உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்கள். காயமடைந்தவா்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன். அவா்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மாநில அரசு வழங்கும்’ என்று ட்விட்டரில் பிரதமா் நரேந்திர மோடி பதிவிட்டுள்ளாா்.

இதேபோல், உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத்தும் விபத்தில் உயிரிழந்தோா் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.