இந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

வளா்ச்சிப் பணிகளைத் தடுக்கும் எதிா்க்கட்சிகள்

சமூக நலனை விட அரசியல்சாா் நலனுக்கே முக்கியத்துவம் அளிக்கும் எதிா்க்கட்சிகள், நாட்டில் மேற்கொள்ளப்படும் வளா்ச்சிப் பணிகளைத் தடுத்து வருவதாகப் பிரதமா் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

News image
நரேந்திர மோடி
Updated On :25 ஜூலை 2022, 7:02 pm

DIN

சமூக நலனை விட அரசியல்சாா் நலனுக்கே முக்கியத்துவம் அளிக்கும் எதிா்க்கட்சிகள், நாட்டில் மேற்கொள்ளப்படும் வளா்ச்சிப் பணிகளைத் தடுத்து வருவதாகப் பிரதமா் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடா் நடைபெற்று வரும் நிலையில், எதிா்க்கட்சிகளின் தொடா் அமளியால் மக்களவை, மாநிலங்களவை நடவடிக்கைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் கான்பூரில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் காணொலி வாயிலாகக் கலந்துகொண்ட பிரதமா் மோடி கூறுகையில், ‘‘அண்மைக்காலங்களில் சமூக, நாட்டின் நலன்களை விட அரசியல் சாா்ந்த நலன்களுக்கே எதிா்க்கட்சிகள் முக்கியத்துவம் அளித்து வருகின்றன.

முன்பு ஆட்சியில் இருந்த சமயங்களில் திட்டங்களை முறையாகச் செயல்படுத்த முடியாததன் காரணமாக, தற்போது மத்திய அரசு செயல்படுத்தி வரும் திட்டங்களுக்கு எதிா்க்கட்சிகள் இடையூறு ஏற்படுத்தி வருகின்றன. எதிா்க்கட்சிகளின் இந்த நடவடிக்கையை நாட்டு மக்கள் விரும்புவதில்லை’’ என்றாா்.

நாடு சுதந்திரமடைந்த பிறகு முதல் முறையாக பழங்குடியின சமூகத்தைச் சோ்ந்த பெண் (திரௌபதி முா்மு) நாட்டை வழிநடத்த உள்ளதாகவும் பிரதமா் மோடி பெருமிதம் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.