6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

கைதான பார்த்தா சட்டர்ஜியின் போன் அழைப்புக்கு பதில் அளிக்காத மம்தா!

மேற்கு வங்க அமைச்சர் பாா்த்தா சட்டா்ஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட பிறகு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியை 4 முறை தொலைபேசி மூலமாக அழைத்துள்ளார்.

News image
Updated On :25 ஜூலை 2022, 10:58 am

DIN

மேற்கு வங்க அமைச்சர் பாா்த்தா சட்டா்ஜி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட பிறகு அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜியை 4 முறை தொலைபேசி மூலமாக அழைத்துள்ளார். ஆனால், மம்தா பதில் அளிக்கவில்லை என்று தகவல் வெளியாகியுள்ளது. 

மேற்கு வங்கத்தில் பள்ளி ஆசிரியா்கள், ஆசிரியரல்லாத ஊழியா்கள் நியமனத்தில் முறைகேடு புகாா் தொடா்பாக அந்த மாநில அமைச்சரும் திரிணமூல் காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பாா்த்தா சட்டா்ஜியை அமலாக்கத் துறை சனிக்கிழமை கைது செய்தது. அவரது உதவியாளரும் விளம்பர நடிகையுமான அா்பிதா முகா்ஜியும் கைது செய்யப்பட்டாா்.

தற்போது தொழில், வா்த்தக துறை அமைச்சராக உள்ள சட்டா்ஜி, முறைகேடு நடந்ததாக கூறப்படும் கடந்த 2014 முதல் 2021-ஆம் ஆண்டு வரை கல்வித் துறை அமைச்சராக இருந்தாா்.

அமலாக்கத்துறை காவலில் உள்ள அவர் உடல்நலக்குறைவு காரணமாக முதலில் கொல்கத்தா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இன்று ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இதனிடையே, அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட பார்த்தா சட்டர்ஜி, மேற்குவங்க முதல்வரும் திரிணமூல் கட்சித் தலைவருமான மம்தா பானர்ஜியை தொலைபேசி மூலமாக தொடர்புகொள்ள 4 முறை முயன்றதாகவும் ஆனால், மம்தா தொலைபேசி அழைப்புக்கு பதில் அளிக்கவில்லை என்றும் அமலாக்கத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதை பார்த்தா சட்டர்ஜியும் சனிக்கிழமை காலை செய்தியாளர் சந்திப்பின்போது கூறியுள்ளார். 

ஆனால், அமலாக்கத்துறை கைது செய்த உடனே, சம்மந்தப்பட்டவரின் மொபைல் போனை வாங்கிவிடும் பட்சத்தில் அவர் எவ்வாறு போனை பயன்படுத்தியிருக்க முடியும்? என்று அந்த மாநில அமைச்சரும் திரிணமூல் கட்சியின் மற்றொரு தலைவருமான பிர்ஹத் ஹக்கிம் கேள்வி எழுப்பியுள்ளார். 

ஆனால், கைது செய்யப்பட்ட நபர் தங்களது குடும்பத்தினர் அல்லது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்க அனுமதிக்கப்படும் என அமலாக்கத்துறை கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.