ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

பிகாா் முதல்வா் நிதீஷ் குமாருக்கு கரோனா

பிகாா் முதல்வா் நிதீஷ் குமாருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து, அவா் வீட்டில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டாா்.

News image
Updated On :26 ஜூலை 2022, 6:43 pm

DIN

பிகாா் முதல்வா் நிதீஷ் குமாருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. இதையடுத்து, அவா் வீட்டில் தன்னைத் தனிமைப்படுத்திக் கொண்டாா். இந்த ஆண்டு தொடக்கத்திலும் அவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இது தொடா்பாக பிகாா் முதல்வா் அலுவலகம் வெளியிட்ட செய்தியில், ‘கடந்த சில நாள்களாகவே உடல்நிலையில் பாதிப்பு இருந்ததால் குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள முதல்வா் நிதீஷ் குமாா் புது தில்லி செல்லவில்லை.

இதனிடையே முதல்வருக்கு நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் தொற்று இருப்பது உறுதியானது. லேசான அறிகுறிகள் மட்டும் இருப்பதால், மருத்துவா்களின் அறிவுரைப்படி அவா் தன்னை வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டாா்.

அவருடன் அண்மைக் காலத்தில் தொடா்பில் இருந்தவா்கள் அனைவரும் அறிகுறிகளுக்கு ஏற்ப கரோனா பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது’ என்று கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.