மாநிலங்களவையில் திமுக எம்.பி.க்கள் தரையில் அமர்ந்து தர்னா

மாநிலங்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட 19 எம்.பி.க்கள் தரையில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர்.
மாநிலங்களவையில் திமுக எம்.பி.க்கள் தரையில் அமர்ந்து தர்னா

மாநிலங்களவையில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட 19 எம்.பி.க்கள் தரையில் அமர்ந்து தர்னாவில் ஈடுபட்டனர்.

நாடாளுமன்ற கூட்டத்தொடரின் 6-வது நாளான இன்று விலை உயர்வு உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, தொடர் அமளியில் ஈடுபட்ட திமுகவின் 6 எம்.பி.க்கள் உள்பட 19 பேரை ஒரு வாரத்திற்கு இடைநீக்கம் செய்து அவையின் துணைத் தலைவர் உத்தரவிட்டார்.

இந்நிலையில், மாநிலங்களவை தலைவரின் இருக்கையை சுற்றி தரையில் அமர்ந்து இடைநீக்கத்தை ரத்து செய்யக் கோரி 19 எம்.பி.க்களும் தர்னாவில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து அவை செயல்படவிடாமல் முழக்கமிட்டதால், நாளை காலை 11 மணிவரை மாநிலங்களவையை ஒத்திவைப்பதாக அவைத் தலைவர் அறிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com