27 மாவட்டங்களுக்கு இன்று ‘மஞ்சள்’ எச்சரிக்கைமேக்கேதாட்டு அணைக்கு எதிராக பேரவையில் இன்று தீா்மானம்: முதல்வா் விஜய் முன்மொழிகிறாா்அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தில் மாற்றமில்லை!அஞ்சல் துறை லோக் அதாலத்: ஜூன் 30-க்குள் மனுக்களை அனுப்பலாம்ஜந்தா் மந்திரில் நாளை இரண்டாம் கட்ட போராட்டம்: கரப்பான்பூச்சி மக்கள் கட்சிநாடு முழுவதும் மேலும் 3 கோடி குடும்ப அட்டைகள் வழங்க வாய்ப்பு - மத்திய அமைச்சா் தகவல்பிஎம் கிசான் திட்டத்தின்கீழ் 9.44 கோடி விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நாளை பணம் டெபாசிட் - பிரதமா் மோடி தொடங்கி வைக்கிறாா்பிரிக்ஸ் தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மாநாட்டில் பங்கேற்பதாக சீனா அறிவிப்புநீட் தோ்வன்று ரயில் நிலையங்களில் உதவி மையங்கள்ரூ. 2,400 கோடி வேலைவாய்ப்பு ஊக்கத்தொகை: இன்று பிரதமா் வழங்குகிறாா் - நாடு முழுவதும் நேரலைகுடியரசு துணைத் தலைவா் இன்று லடாக் பயணம்
/

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களைப் பார்வையிட்டார் ஆந்திர முதல்வர்

ஆந்திர மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கோனசீமா மாவட்டத்தில் உள்ள கிராமங்களை ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி இன்று பார்வையிட்டார். 

News image
Updated On :27 ஜூலை 2022, 1:41 pm IST

ஆந்திர மாநிலத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கோனசீமா மாவட்டத்தில் உள்ள கிராமங்களை ஆந்திர முதல்வர் ஒய்.எஸ்.ஜெகன் மோகன் ரெட்டி இன்று பார்வையிட்டார். 

ஆந்திரத்தில் பல பகுதிகளில் கனமழை பெய்துவரும் நிலையில், முதல்வர் ரெட்டி வெள்ளம் பாதித்த பகுதிகளுக்குச் சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுடன் கலந்துரையாடி வருகிறார். 

அதன்படி, இன்று கோனசீமா மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதல்வர் இன்று சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ப.கன்னவரம் தொகுதியில் உள்ள கிராமங்களுக்கு படகில் சென்று, அங்குள்ள மக்களுடன் கலந்துரையாடினார். மேலும் நிவாரண திட்டங்கள் குறித்துக் கேட்டறிந்தார். 

முன்னதாக, கோதாவரி வெள்ளம் மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுடன் ஜூலை 16ஆம் தேதி முதல்வர் ரெட்டி ஆய்வுக் கூட்டத்தை நடத்தினார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் ரேஷன் பொருட்கள் மற்றும் அன்றாட அத்தியாவசியப் பொருட்களை போர்க்கால அடிப்படையில் வழங்க வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தினார். மேலும் உயிர்ச் சேதம் ஏற்படாமல் விழிப்புடன் இருக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

கோதாவரி ஆற்றில் ஒவ்வொரு மணி நேரமும் நீர்மட்டம் உயர்ந்து வருவதால், மேற்கு கோதாவரி மற்றும் கோனசீமா மாவட்டங்களில் உள்ள பெரும்பாலான கிராமங்களை அச்சுறுத்தி வரும் நிலையில் ஆந்திரத்தின் சில பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. 

நிலைமையைத் தீவிரமாக கண்காணிக்கக் காவல் துறையும், மாவட்ட ஆட்சியரும் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று அம்மாநில முதல்வர் உத்தரவிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.