சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

பசுவின் கோமியத்திலிருந்து உரம் தயாரிக்கும் திட்டம்: எந்த மாநிலத்தில் தெரியுமா?

பசுவின் கோமியத்தில் இருந்து பூச்சுக்கொல்லிகள் மற்றும் உரம் தயாரிக்கும் திட்டத்தை சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகெல் இன்று (ஜூலை 28) தொடங்கி வைத்தார். 

News image
Updated On :28 ஜூலை 2022, 12:46 pm

DIN

பசுவின் கோமியத்தில் இருந்து பூச்சுக்கொல்லிகள் மற்றும் உரம் தயாரிக்கும் திட்டத்தை சத்தீஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகெல் இன்று (ஜூலை 28) தொடங்கி வைத்தார்.

இந்தப் புதிய திட்டத்தின் கீழ் பசுவின் கோமியம் லிட்டருக்கு குறைந்தபட்சம் ரூ.4-க்கு அரசினால் வாங்கிக் கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தினை சத்தீஸ்கர் தலைநகரில் உள்ள அவரது அரசு இல்லத்தில் இருந்து பாகெல் தொடங்கி வைத்தார். உள்ளூர் விவசாயத் திருவிழாவின் ஒரு பகுதியாக இந்தப் புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

திட்டத்தினை அறிமுகப்படுத்திய முதல்வர் பூபேஷ் பாகெல், விழாவின் ஒரு பகுதியாக 5 லிட்டர் பசுவின் கோமியத்தை நிதி சுய உதவிக் குழுவிற்கு வழங்கினார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சத்தீஸ்கர் மாநிலத்தில் கோதான் நியாய் திட்டம் தொடங்கப்பட்டது. அந்த திட்டத்தின் கீழ் பசுவினுடைய சாணம் கிலோ ரூ.2-க்கு பசு வைத்திருப்பவர்களிடம் இருந்து பெறப்பட்டது. தற்போது அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பசுவின் கோமியத்திலிருந்து உரம் தயாரிக்கும் திட்டம் கோதான் நியாய் திட்டத்தின் தொடர்ச்சியாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 


இந்தத் திட்டம் குறித்து பேசிய பூபேஷ் பாகெல் கூறியதாவது: “கோதான் நியாய் திட்டத்தின் வளர்ச்சியினால் நாட்டில் உள்ள மற்ற மாநிலங்களும் இந்தத் திட்டத்தினை செயல்படுத்த ஆர்வம் காட்டுகின்றன. நீங்கள் ஏழையாக இருங்கள் அல்லது பணக்காராக இருங்கள். யார் வேண்டுமானாலும் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடையலாம். கடந்த 2 ஆண்டுகளாக ரூ.300 கோடிக்கும் அதிகமாக பசுவின் சாணத்தினை விற்றவர்களின் வங்கிக் கணக்கிற்கு பணம் நேரடியாக செலுத்தப்பட்டுள்ளது.” என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.