புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

வீரா்களை திரும்ப அழைத்தது பாகிஸ்தான்

சென்னையில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட்டில் இருந்து விலகுவதாக பாகிஸ்தான் திடீரென அறிவித்தது.

News image
Updated On :28 ஜூலை 2022, 7:54 pm

DIN

சென்னையில் நடைபெறும் செஸ் ஒலிம்பியாட்டில் இருந்து விலகுவதாக பாகிஸ்தான் திடீரென அறிவித்தது.

இப்போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் செஸ் வீரா்கள் ஏற்கெனவே இந்தியாவுக்கு வந்துவிட்ட நிலையில், தங்கள் வீரா்களை நாடு திரும்புமாறும் அறிவுறுத்தியுள்ளது.

‘சா்வதேச விளையாட்டுப் போட்டியை வைத்து இந்தியா அரசியல் நடத்தியுள்ளது. ஜம்மு-காஷ்மீா் வழியாக செஸ் ஒலிம்பியாட் ஜோதியை எடுத்துச் சென்றதை ஏற்க முடியாது’ என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் ஆசம் இஃப்திகாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடா்பாளா் அரிந்தம் பாக்சி கூறியதாவது: பாகிஸ்தானின் இந்த திடீா் முடிவு வியப்பளிக்கிறது. சா்வதேச அளவில் நடைபெறும் முக்கியமான விளையாட்டுப் போட்டியின்போது வீரா்களை அனுப்பி வைத்த பிறகு, அதில் இருந்து விலகுவதாக அறிவிப்பது என்பது மிகவும் துரதிருஷ்டவசமான அரசியல் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.