செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

திகார் சிறையில் காவலர் அலுவலகத்தில் சிசிடிவி: தில்லி நீதிமன்றம் உத்தரவு

திகார் சிறைக் கண்காணிப்பாளர் மற்றும் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துமாறு திகார் சிறை இயக்குநருக்கு தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

News image
Updated On :30 ஜூலை 2022, 8:57 am


திகார் சிறைக் கண்காணிப்பாளர் மற்றும் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்துமாறு திகார் சிறை இயக்குநருக்கு தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

உயரடுக்கு பாதுகாப்பு கொண்ட தேசிய தலைநகர் திகார் சிறைச்சாலையில் சமீபத்தில் பல சர்ச்சைகள் ஏற்பட்டது. சிறைச்சாலையுடன் தொடர்புடைய 40-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் கடந்த ஓராண்டில் பல்வேறு சட்ட அமலாக்க நிறுவனங்களால் கைதிகளுக்கு சலுகைகளை நீட்டித்தாகக் கூறி வழக்குப் பதிவு செய்துள்ளனர். 

இதையடுத்து, சிறைக் கண்காணிப்பாளர், துணை கண்காணிப்பாளர் அலுவலகங்களில் சிசிடிவி கேரமாக்கள் பொருத்தப்பட்டால் சிறை அதிகாரிகள் மீதான பொய்யான குற்றச்சாட்டுகள் களையப்படும். இது வெளிப்படைத் தன்மையை மேலும் பிரதிபலிக்கும் என்று நீதிமன்றம் சமீபத்தில் ஒரு உத்தரவில் கூறியது. 

திகார் சிறை கைதிகளுக்கு வசதிகளை வழங்குவதில் பிடிபட்ட அதிகாரிகளுக்கு பெரும் பின்னடைவைத் தொடர்ந்து திகார் சிறை தனது பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பலப்படுத்தி வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.