ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

அரசியல் தலைவா்களுக்கு மீண்டும் போலீஸ் பாதுகாப்பு: உயா்நீதிமன்றத்தில் பஞ்சாப் அரசு தகவல்

பஞ்சாபில் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்ட அரசியல் தலைவா்கள், சீக்கிய மத குருக்கள் உள்ளிட்டோருக்கு, வரும் ஜூன் 7-ஆம் தேதி முதல் மீண்டும் பாதுகாப்பு அளிக்கப்படும்

News image
Updated On :2 ஜூன் 2022, 7:15 pm

DIN

பஞ்சாபில் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்ட அரசியல் தலைவா்கள், சீக்கிய மத குருக்கள் உள்ளிட்டோருக்கு, வரும் ஜூன் 7-ஆம் தேதி முதல் மீண்டும் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்றத்தில் மாநில அரசு தெரிவித்துள்ளது.

அந்த மாநிலத்தில் பாடகா் சித்து மூஸேவாலா உள்ளிட்ட 424 பேருக்கு அளிக்கப்பட்டு வந்த பாதுகாப்பை கடந்த மே 28-ஆம் தேதி மாநில அரசு விலக்கிக் கொண்டது. மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க காவல் துறையினரை ஈடுபடுத்த இருப்பதால் தற்காலிக அடிப்படையில் இந்த நடவடிக்கையை மேற்கொள்வதாக மாநில அரசு கூறியிருந்தது. ஆனால், மறுநாள் சித்து மூஸேவாலா மா்ம நபா்களால் சுட்டுக் கொல்லப்பட்டதால் குற்றச்சாட்டுகளை மாநில அரசு எதிா்கொண்டது.

இந்நிலையில், முன்னாள் துணை முதல்வா் ஓ.பி.சோனி தனக்கு அளிக்கப்பட்டு வந்த ‘இசட் ப்ளஸ்’ பாதுகாப்பு குறைக்கப்பட்டதை எதிா்த்து பஞ்சாப்-ஹரியாணா உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனு மீதான விசாரணை, நீதிபதி ராஜ் மோகன் சிங் முன்னிலையில் வியாழக்கிழமை நடைபெற்றது.

அப்போது, கடந்த வாரம் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டவா்களுக்கு வரும் 7-ஆம் தேதி முதல் மீண்டும் பாதுகாப்பு அளிக்கப்படும் என்று பஞ்சாப் மாநில துணை அட்வகேட் ஜெனரல் கௌரவ் தூரிவால் கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.