விசாகப்பட்டினம்: ஆந்திர மாநிலம் அனகாபல்லே மாவட்டத்தில் இயங்கி வரும் கால்நடை மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட வாயுக் கசிவால் 200க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
போரூஸ் ஆய்வுக் கூடத்தை ஒட்டி அமைந்திருக்கும் மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட வாயுக் கசிவினால், அங்கு பணியிலிருந்த 200க்கும் மேற்பட்ட பெண்களுக்கு பல்வேறு உடல்நலக் கோளாறுகள் ஏற்பட்டன.
கண் எரிச்சல், தலைவலி, வாந்தி உள்ளிட்ட பிரச்னைகளால் பாதிக்கப்பட்ட பெண்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு யாருக்கும் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என்று காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அம்மோனியம் வாயு கசிவே இந்த விபத்துக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. அங்கிருந்த அனைத்துத் தொழிலாளர்களும் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

2 ஆம் கட்ட அமைதிப்பேச்சு? ஈரான் சென்றார் பாக். ராணுவத் தலைமைத் தளபதி!

மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்

ஒவ்வொரு வீட்டிலும் கருப்புக்கொடி! கனிமொழி எம்.பி. வேண்டுகோள்! | DMK

இமயமலையில் தொலைந்த அணுசக்தி சாதனம்... மிஸ்டர் எக்ஸ் படத்தின் முன்னோட்ட விடியோ!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு


