விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

பிரியங்கா காந்திக்கு கரோனா

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்திக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

News image

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி

Updated On :3 ஜூன் 2022, 6:19 am

காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்திக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்திக்கு நேற்று (ஜுன் 2) கரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில், லக்னோவுக்கு சென்ற அவரது மகள் பிரியங்கா காந்தி, தனது பயணத்தை ரத்து செய்துவிட்டு தில்லி திரும்புவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்திருந்தன.

இரண்டு தவணை கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட பின்பும் சோனியா காந்திவுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் வீட்டீல் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி தன் டிவிட்டர் பக்கத்தில் “சிறிய அறிகுறிகளுடன் எனக்கு கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. நெறிமுறைகளைப் பின்பற்றி வீட்டில் என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன். என்னுடன் தொடர்பு கொண்டவர்கள் தேவையான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

இன்று தனக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளதாக பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.