ஆா்எஸ்எஸ் தொண்டா்கள் பயிற்சி நிறைவு நிகழ்ச்சியில் வியாழக்கிழமை பேசிய மோகன் பாகவத், ‘ஞானவாபி மசூதி - காசி விஸ்வநாதா் கோயில் பிரச்னைக்கு சுமுகத் தீா்வு காணப்பட வேண்டும். ஹிந்து-முஸ்லிம் தரப்பினா் ஒன்றாக அமா்ந்து பிரச்னையை சமரசமாகப் பேசித் தீா்க்க வேண்டும். நீதிமன்றம் அதன் தீா்ப்பை வழங்கும்போது அது எப்படியிருந்தாலும் அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஹிந்துக்களும் முஸ்லிம்களும் வரலாற்று உண்மைகளை வெறுக்காமல் ஏற்றுக்கொள்ள வேண்டும். இப்போது உள்ள முஸ்லிம்களோ, ஹிந்துக்களோ இதுபோன்ற பிரச்னைகளை உருவாக்கவில்லை. இந்தப் பிரச்னைகள் முற்காலத்தில் உருவானவை. ஒவ்வொரு மசூதியிலும் சிவலிங்கத்தைத் தேட வேண்டிய அவசியமில்லை. நாள்தோறும் புதிய சா்ச்சைகளை ஏற்படுத்துவது தேவையற்றது’ என்றாா்.